Ram Gopal Varma About Corona
Ram Gopal Varma About Corona

கொரானா வைரஸ் பரவ யாரோ ஒருவரின் மனைவி தான் காரணம் என பதிவிட்டுள்ளார் சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா.

Ram Gopal Varma About Corona : கொரானா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கிப் போய் உள்ளனர்.

மத்திய அரசும் 21 நாட்களுக்கு அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி வரை இந்தியாவை முடக்கியுள்ளது.

விஜய் ஒன்னும் அப்பா உதவியால வரல, அஜித்தும்.. – மாஸ்டர் பட நடிகர் அதிரடி பேச்சு.!

இதுகுறித்து தெலுங்கு திரையுலகின் சர்ச்சை இயக்குனரும் சூர்யாவை வைத்து ரத்த சரித்திரம் படத்தை இயக்கி இருந்த ராம்கோபால் வர்மா டிவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் யாரோ ஒருவரின் மனைவிமார் தான் கடவுளிடம் காரோனாவை அனுப்புமாறு வேண்டி இருப்பார்கள்.

அதற்கான காரணங்கள்

1. விளையாட்டு நிகழ்ச்சிகளை நிறுத்த
2. பார் மற்றும் பப்களை மூட
3. நண்பர்களுடன் வெளியே திரிவதை நிறுத்த
4. ஆபீஸ்ல இருக்கேன் என பொய் சொல்வதை தடுக்க.

என குறிப்பிட்டுள்ளார்.