Ram Gopal Varma About AmirKhan Divorce

அமீர்கான் தன்னுடைய மனைவியை பிரிவதாக அறிவித்துள்ள நிலையில் விவாகரத்து கொண்டாடப்பட வேண்டும், திருமணங்கள் முட்டாள் தனத்தால் நடைபெறுகிறது என பதிவிட்டுள்ளார் சர்ச்சைக்குரிய இயக்குனர்.

Ram Gopal Varma About AmirKhan Divorce : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமீர்கான். இரண்டு வருடத்திற்கு ஒரு படம் கொடுத்தாலும் தொடர்ந்து தரமான படமாக கொடுத்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவியை பிரிவதாக சமீபத்தில் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்து இருந்தார். இருவரும் ஒரு மனதாக பிரிகிறோம். எங்களுடைய குழந்தைக்கு பெற்றோர் என்ற முறையில் இணைந்தே கடமை ஆற்றுவோம் என கூறியிருந்தார்.

மேகதாது அணை விவகாரம் : மத்திய அமைச்சருடன் துரைமுருகன் சந்திப்பு..

15 வருடங்களுக்கு பிறகு மனைவியை பிரிவதாக அமீர்கான் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் இது குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சர்ச்சை இயக்குனரான ராம்கோபால் வர்மா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இருவரும் ஒரு மனதாக பிரிகிறார்கள். இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை? விமர்சனம் செய்பவர்கள் விமர்சித்துக் கொண்டே தான் இருப்பார்கள். விவாகரத்து கொண்டாடப்பட வேண்டும். திருமணங்கள் முட்டாள்தனத்தால் நடைபெறுகிறது என சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டுள்ளார்.

பிரபல டிவி சேனலில் இருந்து Vanitha வெளியேற இதுதான் காரணமா? – அவரே சொன்ன தகவல் | CInema News

மேலும் அமீர்கான் மற்றும் அவரது மனைவி வாழ்க்கை இனி வண்ணமயமாக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இருவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களையும் அவர் அந்த பதிவில் பதிவிட்டுள்ளார்.