Rakul will watch NGK in Mumbai :
என்.ஜி.கே படத்தை முதல்நாள் முதல் காட்சி மும்பையில்தான் பார்ப்பேன் என்று ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளாராம். காரணம் அன்று மும்பையில் அவருக்கு படப்பிடிப்பு உள்ளதாம்.
செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
ஒரு படத்துக்காக பிக் பாஸ் 3-க்கு நோ சொல்லும் பிரபல நடிகை – உண்மைதானா?
இப்படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தினம் தினம் ரிசர்வேஷனுக்காக சூர்யாவின் ரசிகர்கள் திரையரங்குகளை படையெடுக்கிறார்களாம்.
இது ஒருபக்கம் இருக்க கர்நாடகாவிலும் தற்போது இப்படம் அதேநாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இப்படத்தை தீரஜ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கை தொடர்ந்து தற்போது கர்நாடகாவிலும் இப்படத்தின் வியாபாரம் படு ஜோராக நடந்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தை முதல்நாள் முதல் காட்சி மும்பையில்தான் பார்ப்பேன் என்று ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளாராம். காரணம் அன்று மும்பையில் அவருக்கு படப்பிடிப்பு உள்ளதாம்.