நடிகை ரகுல் ப்ரீத் சிங் அண்மையில் நேர்காணலில் பகிர்ந்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு திரை உலகில் நாயகியாக அறிமுகமான இவர் தமிழில் நடிப்பது மட்டுமல்லாமல் தற்போது பாலிவுட் படங்களிலும் பல நடிகர்களுக்கு ஜோடியாக பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது தமிழில் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் இவர் தற்போது நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் சினிமா துறையில் தான் மேற்கொண்ட சவால்கள் குறித்து அண்மையில் நடந்த பேட்டியில் மனம் திறந்து பகிர்ந்து இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

அதில் அவர், சினிமாவில் எனக்கு எந்த பின்னணியும் இல்லை, மும்பையில் ஒரு ஆபீஸில் உட்கார்ந்து எந்தெந்த ஆபீஸ்க்கு அடுத்தடுத்து செல்ல வேண்டும் என்பதை திட்டம் போடுவேன். நடிகை தேர்வுகளில் பங்கேற்க பையில் சில உடைகளை வைத்துக்கொண்டு காரிலேயே உடைகளை மாற்றிக் கொள்வேன். சில வாய்ப்புகள் கையில் கிடைப்பது போல் இருந்து நழுவி விடும். இதையெல்லாம் போராட்டம் என நினைக்க மாட்டேன், ஏனென்றால் கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது. அந்த தன்னம்பிக்கையுடன் இருந்ததாலே இந்த நிலைக்கு என்னால் வர முடிந்தது என்று கூறியிருக்கிறார். இவரது இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.