பிரபல நடிகர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் தடையற தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், NGK உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
இவர் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது சினிமா துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பேசியுள்ளார்.
மேலும் தன்னை ஒரு நடிகர் படுக்கைக்கு அழைத்ததாக கூறியுள்ளார், ஆனால் அவரின் பெயரை குறிப்பிடவில்லை. அந்த நடிகர் டீசெண்டாக தான் தன்னிடம் கேட்டதாகவும் கூறியுள்ளார்.
இது போன்ற தொல்லைகள் நடிகைகளுக்கு ஏற்படாதபடி திரையுலகில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
ரகுல் ப்ரீத் சிங்கின் இந்த பேச்சு அந்த நடிகர் யாராக இருக்கும் என்ற விவாதத்தை சமூக வளையதளங்களில் ஏற்படுத்தியுள்ளது.