விஜய் டிவியில் இருந்து வெளியேறிய ரட்சிதாவுக்கு பெரிய ஜாக்பாட் ஒன்று அளித்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரட்சிதா. இதனைத் தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து வந்த இவர் கன்னட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து விலகினார்.
இதனைத் தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சொல்ல மறந்து கதை என்ற சீரியலில் நடித்து வருகிறார். கணவரை விவாகரத்து செய்த ரட்சிதா இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சீரியல் நடித்து வரும் ரட்சிதா அடுத்ததாக வெப் சீரிஸ் தொடர் ஒன்றில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தொடைக்கு மேல் உடைய அணிந்து புகைப்படங்களை வெளியிட்ட ரட்சிதா விரைவில் இந்த வெப் சீரிஸ் பற்றி அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என அறிவித்துள்ளார்.