குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் காணாமல் போனது ஏன் என ரக்சன் பதிலளித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதுவரை இரண்டு சீசன்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து மூன்றாவது சீசனும் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றியை பெற்றது.
வழக்கம் போல மூன்றாவது சீசனையும் ரக்சன் தொகுத்து வழங்கினார். ஆனால் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியின் ரக்சன் பாதியில் காணாமல் போன சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கு என்ன காரணம் என இதுவரை தெரியாமல் இருந்து வந்த நிலையில் முதல் முறையாக ரக்சன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது எனக்கு அன்று கடுமையான ஜுரம் கொரோனா இருக்குமா என பயந்தேன் ஆனால் அதுவும் இல்லை. மேலும் என்னுடைய தனிப்பட்ட விஷயங்கள் காரணமாகவும் அந்த நிகழ்ச்சியின் இறுதி நாளில் தொடர முடியவில்லை என தெரிவித்துள்ளார்.