நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் பொழுது ஒரு சிறுமிக்கு ஆட்டோகிராப் போட்டு அவருடன் போட்டோஸ் எடுத்துள்ளார் அது வைரலாகி வருகிறது.
இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் “ஜெயிலர்” திரைப்படத்தில் தனது 169 வது படத்தை நடித்து வருகிறார். அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரவபூர்வமான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து மேலும் சில நட்சத்திரங்களாக பருத்திவீரன் சரவணன், யூடியூப் சிறுவன் ரித்து, நடிகர் ஜெய் ஆகியோரும் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து தற்பொழுது ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஒரு சிறுமிக்கு ஆட்டோகிராப் போட்டு அவருடன் க்யூட்டான சில புகைப்படங்களை எடுத்துள்ளார். அப்புகைப்படத்தில் அக்குழந்தையின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியை குறித்து ரசிகர்கள் கமெண்ட் செய்து அதனை வைரலாக்கி வருகின்றனர்.