சூர்யா பேசுனது பிரதமர் மோடிக்கு கேட்டுடுச்சு என ரஜினிகாந்த் காப்பான் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.
Rajinikanth Speech : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பா.ஜ.கவும் அதிமுகவும் சூர்யாவுக்கு எதிராக பேச தொடங்கினர்.
இதனால் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இருந்து சூர்யாவிற்கான ஆதரவு குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கின.
நேற்று நடந்த காப்பான் இசை வெளியீட்டு விழாவில் கூட ரஜினிகாந்த் சூர்யாவிற்கு ஆதரவாக பேசி இருந்தார்.
தன்னை இயக்கிய இயக்குனரையே சந்திக்க மறுத்த ரஜினி, எல்லாம் வார்த்தையால் வந்த வினை.!
மேலும் நான் இது குறித்து பேசி இருந்தால் மோடிக்கு கேட்டு இருக்கும் என சிலர் கூறி வந்தனர். ஆனால் சூர்யா பேசியதே மோடிக்கு கேட்டு விட்டது என கூறினார்.
மேலும் தனக்கு ஏற்கனவே ஒரு முறை கே.வி ஆனந்த் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் அதனை தான் தவற விட்டு விட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதனை கேட்ட ரசிகர்கள் மோடிக்கு கேட்டால் மட்டும் போதுமா தலைவரே.. நம்முடைய கோரிக்கையை அவர்கள் ஆலோசித்து பார்க்க வேண்டும். அது தானே நம்முடைய வெற்றி என கூறி வருகின்றனர்.