இதுவரை 100 கோடி சம்பளம் வாங்கி வந்த ரஜினிகாந்த் ஜெயிலர் படத்துக்காக தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளார்.

தமிழ் சினிமாவில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள திரைப்படம் ஜெயிலர். அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து அதன் காரணமாக நெல்சன் அடுத்ததாக கண்டிப்பாக கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இப்படியான நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டைட்டில் ஜெயிலர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும் ரஜினிகாந்த் இதுவரை படங்களுக்கு 100 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வந்த நிலையில் தற்போது ஜெய்லர் படத்திற்காக சம்பளத்தையும் அதிரடியாக உயர்த்தி உள்ளார் என சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த படத்திற்காக அவர் 151 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மீண்டும் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார் ரஜினிகாந்த். ‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.