மும்பையில் தனக்கான படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினி தற்போது சென்னை திரும்பியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் தற்போது லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் “லால் சலாம்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடிங் ரோலில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாயாக சிறப்பு கௌரவ வேடத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்த போஸ்டரை படக்குழு வெளியிட்டு படம் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருந்த நிலையில் மும்பையில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தளத்தில் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவ் இணைந்திருப்பதையும் படக்குழு அண்மையில் தெரியப்படுத்தியிருந்தது.

இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடிகர் ரஜினிகாந்த் நிறைவு செய்துவிட்டு சென்னை திரும்பி உள்ளார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.