Rajinikanth Picture Removed from Big Boss House :
இந்தியாவில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.
தமிழிலும் ’உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.
வட மாநிலத்தையே மிரள வைத்த விஜய் ரசிகர்கள், குஜராத் IPS அதிகாரி போட்ட டீவீட்டை பாருங்க.!
இதைதொடர்ந்து மூனாவது சீசன் நேற்று துவங்கியுள்ளது. முதல் இரண்டு சீசனை தொடர்ந்து மூனாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்குகிறார்.
இதில் சேரன், ஜாங்கிரி மதுமிதா, சாண்டி மாஸ்டர், பாத்திமா பாபு, மோகன் வைத்யா, செரின், சாக்ஷி அகர்வால், மலேசியாவை சேர்ந்த மாடல்கள் இருவர், பருத்திவீரன் சரவணன், அபிராமி வெங்கடாச்சலம், ரேஷ்மா, வனிதா விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.
முதல் இரண்டு சீசனை விட இந்த முறை வீட்டில் நிறைய மாற்றங்கள் அரங்கேறியுள்ளது. குறிப்பாக ஓவியங்களும் புகைப்படங்களும். இதில் கமலின் விருமாண்டி புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக ரஜினியின் பேட்ட புகைப்படமும் இருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்த புகைப்படம் தற்போது நீக்கப்பட்டுள்ளது. இந்தமுறை ஆரம்பிக்கவே இல்லை. அதற்குள் சர்ச்சையில் சிக்கியுள்ளது பிக் பாஸ்.