தன்னால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட ரஜினி திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
Rajinikanth Next Movie Producer Update : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
கட்டுப்பாடு பகுதிகள், 5 மாவட்டத்தில் இல்லை : தமிழக அரசு அறிவிப்பு
படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக நிறைவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. வரும் தீபாவளி விருந்தாக நவம்பர் 4ஆம் தேதியில் படத்தை வெளியிடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. அதன் பின்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது ரஜினிகாந்த் இந்தப் படத்தை லைக்கா நிறுவனத்திற்கு கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
லைகா தயாரிப்பில் வெளியான 2.O மற்றும் தர்பார் ஆகிய படங்கள் அந்நிறுவனத்திற்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை ஈடுகட்ட தன்னுடைய அடுத்த படத்தை லைக்கா நிறுவனத்திற்கு கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் OTT-க்கு செல்லும் சூர்யாவின் படம் – வெளியான SHOCKING Update.!