நடிகர் ரஜினி அரசியலுக்காக தீட்டி வரும் திட்டங்கள் பற்றிய செய்தி வெளியே கசிந்துள்ளது.
Rajinikanth polytics master plan for his party of tn – கடந்த 2017ம் வருடம் டிசம்பர் 31ம் தேதி அரசியலுக்கு வருவதாக அறிவித்தார் ரஜினி. ஆன்மிக அரசியலை முன்னெடுக்கப்போவதாகவும் கூறினார். ஆனால், ஒன்றரை வருடங்களாகியும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தாரே தவிர அவர் அரசியல் அறிவிப்பை வெளியிடவில்லை. அதேநேரம் தமிழகத்தின் அனைத்து மாநிலங்களிலும் அவரின் கட்சிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வந்தனர். படப்பிடிப்பில் இடைவேளை கிடைக்கும் நேரங்களில் தனது கட்சி நிர்வாகிகளுடன் ரஜினி சந்திப்பும் நடத்தினர்.
கடைக்காரிடம் கூட கலாய் வாங்கும் ரஜினிகாந்த் – இத பாருங்க.!
தற்போது அவரின் அரசியல் நடவடிக்கை சூடுபிடித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இதுவும் அவரின் தர்பார் படத்திற்கான விளம்பரம் மட்டுமே என பலரும் சமூக வலைத்தளங்களில் கூறி கிண்டலடித்து வருகின்றனர்.
ஆனால், உண்மையிலேயே ரஜினி தனது அரசியல் நடவடிக்கைகளில் வேகம் எடுத்துள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது. அதோடு, இதுவரை எந்த கட்சிகளும் செய்யாத பல விஷயங்களை ரஜினி செய்ய இருக்கிறார் எனவும் ரஜினி மன்ற நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது. அதில் ஒன்றுதான் 234 தொகுதிகளிலும் ஒரு அலுவலகத்தை அவர் துவங்க உள்ளாராம். பொதுவாக அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளில் அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர்கள் என தனித்தனியாக அவர்களுக்கென்று அலுவலகம் வைத்திருப்பார்கள். அங்கே கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்று கட்சி நிலவரம் பற்றி பேசுவார்கள்.
அபிராமியின் மறுபக்கம், இது தெரியாமல் போச்சே..!
ஆனால், ரஜினி தரப்பில் துவங்கப்படும் அலுவலகம் வேறு வகையானது. அங்கே படித்த இளைஞர்கள் கம்யூட்டரில் அமர்ந்து பணிபுரிவார்கள். அந்த தொகுதி கட்சி நிர்வாகிகள் அங்கு சென்று கள நிலவரங்கள் குறித்த தகவல்களை அளிப்பார்கள். இணையத்தின் மூலம் அந்த தகவல் தலைமைக்கு சென்றடையும். இதுதான் ரஜினி அரசியலில் மெகா திட்டம். இது ஒரு பகுதிதான். தலைவரிடம் இன்னும் பல திட்டங்கள் இருக்கிறது. விரைவில் அவர் அசுர வேகமெடுக்கவுள்ளார். அப்போது இங்குள்ள அரசியல் கட்சிகள் கதி கலங்கப்போகும் என ரஜினி கட்சி நிர்வாகிகள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.
ரஜினி வரட்டும்.. அவரின் ஆன்மிக அரசியல் வேகமெடுக்கட்டும்.. அவரின் அரசியல் நடவடிக்கை மக்களை கவர்ந்தால்.. மக்களுக்கு ஏற்ற திட்டங்களை அவர் முன்னெடுத்தால் மக்கள் அவரை ஆதரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
வெல்கம் ரஜினி….