Rajinikanth Decision on Annatha
Rajinikanth Decision on Annatha

ரஜினிகாந்த் கொஞ்சம் கூட அட்ஜஸ்ட் பண்ணாததால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

Rajinikanth Decision on Annatha : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா என பலர் இணைந்து நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட இன்னும் இருபது இருபத்தைந்து நாட்கள் மட்டுமே ஷூட்டிங் இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் ரஜினிக்கு இரண்டு சண்டைக் காட்சிகளும் மேலும் சில காட்சிகளில் நடிக்க வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது.

சினிமாவில் இருந்து விலக முடிவு எடுத்த ரஜினி? இதுதான் கடைசி படமா? – வெளியான ஷாக் தகவல்

இதனால் தான் பிக்சர்ஸ் நிறுவனம் மீதமுள்ள படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டு பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்யலாம் என முடிவு செய்துள்ளது. ஊரடங்குக்கு நடுவிலும் இப்படம் பொங்கல் ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

ஆனால் ரஜினிகாந்த் கொரானா தாக்கம் முழுமையாக முடிவடைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே படப்பிடிப்புக்கு வருவேன் என கூறியுள்ளார். அப்படி இல்லை என்றால் இந்த வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டு பிடித்து விட்டால் ஷூட்டிங்கில் கலந்து கொள்வேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனால் படத்தை பொங்கலுக்கு வெளியிட முடியாது என்ற காரணத்தினால் தயாரிப்பு தரப்பு கொஞ்சம் அப்செட் ஆகி உள்ளது. ஆனால் ரஜினிகாந்த் கூறி விட்டார் என்பதால் வேறு வழியில்லாமல் படப்பிடிப்பை தொடங்காமல் இருந்து வருகிறது என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.