இளம் இயக்குனர் கார்த்திக் நரேனை நடிகர் ரஜினிகாந்த் பராட்டியுள்ளார்.
Rajinikanth appreciated karthick naren – துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இந்த படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. அதன்பின் நரகாசுரன் படத்தை இயக்கினார். அப்படம் சில காரணங்களால் வெளியாகவில்லை.
எனவே, அருண்விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கும் மாஃபியா திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வீடியோவை பார்த்த ரஜினி கார்த்திக் நரேனை நேரில் வரவழைத்து பாராட்டியுள்ளார்.
தெய்வ திரு மகளே இப்படி மடமடனு வளந்திட்டியேமா – ஷாக்கிங் புகைப்படம் .!
இதுகுறித்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார். அதில், பிரில்லியன்ட் வேலை கண்ணா.. செமையா இருக்கு.. என ரஜினிகாந்த் தனது ஸ்டைலில் பாராட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய திரைப்படங்களின் டீசர், டிரெய்லர் மற்றும் திரைப்படமே நன்றாக இருந்தால் இயக்குனரை நேரில் வரவழைத்து பாராட்டுவதை ரஜினிகாந்த் வழக்கமாக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“Brilliant work kanna. Semaya irukku. Loved it” These were Rajini sir’s words after watching the teaser of Mafia. Thank god I did not faint. Blown away by his humility. Thalaivar for a reason ???????? pic.twitter.com/e6pdZtOjbI
— Karthick Naren (@karthicknaren_M) September 14, 2019