நடிகர் ரஜினிகாந்த் எதிர்நீச்சல் சீரியலை பாராட்டி இருக்கிறார்.

இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

எப்போதும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு படம் பிடித்து விட்டால் அப்படத்தின் இயக்குனர் மற்றும் படக்குழுவினரை அழைத்து அவர்களை உடனடியாக பாராட்டி விடுவார். அது பற்றின தகவல் எப்போதும் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகவே இருக்கும்.

அந்த வகையில் நடிகர் ரஜினிக்கு சின்னத்திரையில் மிகவும் பிடித்த சீரியல் எதிர்நீச்சல் தானாம். இதனை அந்த சீரியலின் இயக்குனர் திருசெல்வம் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதில் அவர், இந்த சீரியலை பார்த்து தன்னை பாராட்டிய ரஜினி சார், நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பேன் எனக் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.