Rajini vs Nayanthara : பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.
தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
ஆரம்பத்தில் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் தான் நாயகியாக நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் பின்னர் என்ன நடந்ததோ திடீரென நயன்தாரா படத்தில் நாயகி என அறிவித்தனர்.
இடையில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. அதாவது ஆரம்பத்தில் இப்படத்தில் நாயகியாக கீர்த்திசுரேஷ் தான் முருகதாஸ் ஒப்பந்தம் செய்துள்ளார்.
ஆனால் ரஜினிகாந்த் தான் இதில் தலையிட்டு நயன்தாரா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என கட்டளையிட்டாராம்.
கஜினி பட சமயத்திலேயே நயன்தாராவுக்கும் முருகதாசுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு இருந்தாலும் ரஜினி கேட்டதற்காக இப்படத்தில் கீர்த்தி சுரேஷை நீக்கி நயன்தாராவை ஒப்பந்தம் செய்து இருக்கிறார் முருகதாஸ்.
மேலும் லைகா தயாரிப்பில் ஏற்கனவே கோ கோ படத்தில் நடித்ததால் லைக்கா நிறுவனமும் நயன்தாராவை இப்படத்தில் ஒப்பந்தம் செய்ய மனதார ஒப்புக் கொண்டுள்ளனர்.