Rajini Press Release : என்னுடைய இலக்கு இதுவல்ல என ரஜினிகாந்த் அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர்களான ஜெயலலிதா மற்றும் மு. கருணாநிதி அவர்களின் மறைவிற்கு பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப போவதாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பலர் அரசியலில் இறங்கியுள்ளனர்.
கமல்ஹாசன் வரும் பாராளுமன்ற தேர்தல்களிலும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரஜினிகாந்த் என்னுடைய இலக்கு பாராளுமன்ற தேர்தல் அல்ல சட்டமன்ற தேர்தல் தான் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாராளுமன்ற தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்த கட்சிக்கும் கிடையாது. ஆகையால் எந்தவொரு கட்சியும் என்னுடைய பெயரையோ, என் ரசிகர் மன்றத்தின் பெயரையோ பயன்படுத்த கூடாது எனவும் கேட்டு கொள்கிறேன்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் வலுவான ஆட்சி அமைத்து தமிழகத்தின் பிரச்சனைகளை யார் தீர்த்து வைப்பார்கள் என நம்புகிறீர்களா அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டு கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
#Superstar #Rajinikanth #RajiniMakkalMandram #RajinikanthPressRelease pic.twitter.com/trX9sWcwuz
— Kalakkal Cinema (@kalakkalcinema) February 17, 2019