கடந்த வருடம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மக்களுக்கு நடிகர் ரஜினியின் மக்கள் மன்றம் சார்பில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயல் காரணமாக நாகப்பட்டினம், திருவரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
பலரும் தங்களிம் வீடுகள், பசுமாடு, ஆடு தங்களின் வாழ்வாதாரங்களை இழந்தனர்.
இதில் ,நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதிகளில் குடிசை வீடுகளை முற்றிலும் இழந்த 15 குடும்பங்களுக்கு ஒன்றரை லட்சம் செலவில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வீடுகள் கட்டித்தர முடிவு செய்யப்பட்டது.
தற்போது அதற்கான பணிகள் முடிவடைந்தது. எனவே, அவர்களுக்கு ரஜினி வீட்டு பட்டாவை கொடுக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.