மூன்று பேரன்களுக்கும் ரஜினி எதையாவது பெருசா செய்ய வேண்டும் என திட்டமிட்டு செய்தும் முடித்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாராக சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் ரஜினிகாந்த். தற்போது ஒரு படத்திற்கு இவர் 100 கோடி சம்பளமாக வாங்குவதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே தன்னுடைய இரண்டு மகள்களுக்கு நிறைய சொத்துகளை கொடுத்துள்ள ரஜினி தன்னுடைய பேர பிள்ளைகள்களுக்கும் எதையாவது செய்ய வேண்டும் என திட்டமிட்டு செய்தும் முடித்துள்ளாராம்.
ஐஸ்வர்யா தனுஷின் இரண்டு மகன்கள் மற்றும் சௌந்தர்யாவின் ஒரு மகன் என மூவரின் பேரிலும் பேங்கில் ரூ 25 கோடி பிக்சட் டெபாசிட் செய்துள்ளாராம்.
இவர்கள் மூவருக்கும் 28 வயதாகும் போது இந்த தொகை ரூ 90 கோடியாக திரும்ப கிடைக்கும் என கூறப்படுகிறது.
இதனை கேட்ட நெட்டிசன்கள் ம்ம்ம்… கொடுத்து வச்ச பேர பிள்ளைங்க என பெருமூச்சு விடுகின்றனர்.