kamal haasan : கோவை: தமிழகத்தில் சிஸ்டம் கெட்டு போய்விட்டதாக ரஜினிகாந்த் கூறியதை போல் தற்போது நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.
வரும் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சுமார் 38 இடங்களில் போட்டியிடுகிறது.
மீதமுள்ள இரு இடங்கள் கூட்டணி கட்சியான இந்திய குடியரசு கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கோவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
அதில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை விழாவான இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
அப்போது கமல்ஹாசன் கூறுகையில் “தமிழகத்தில் சிஸ்டம் கெட்டு போய்விட்டது” என கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசுகையில், மக்களவைத் தேர்தலே எங்களுக்கு பிரதானமாக உள்ளது, ஆட்சியாளர்களை நாம் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என கூறினார்.
மேலும் முதலில் தமிழகத்தில் பெருவாரிய இடங்களில் வெற்றி பெறுவோம் எனவும், அதன் பின்னர் டெல்லி செல்வோம் எனவும், தமிழகத்தின் சூழல் எங்களை அரசியலில் நுழைய வைத்து விட்டது எனவும் கூறினார் மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.
இந்நிலையில் கமல் கூறிய தமிழகத்தில் சிஸ்டம் கெட்டு போய்விட்டது என்ற வார்த்தையை, ‘நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்கள் மத்தியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்,
முதல் முறையாக தான் அரசியல் குறித்து பேசியபோது தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுவிட்டது ‘ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கமல்ஹாசனும் அவ்வாறு கூறியிருக்கிறார்.