Rajasthan State Politics : ராஜஸ்தானி இரு துருவம் இருந்த முதல் அசோக் கெலாட்- சச்சின் பைலட் இடையேயான மோதல் முடிவுக்கு வந்ததால் அந்த மாநிலத்தில் கடந்த ஒரு மாதங்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.
இதையடுத்து மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர ஆளும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
இந்தத் தீர்மானத்தால், ராஜஸ்தானின் சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆன பன்வர்லால் சர்மா, விஷ்வேந்தர்சிங் ஆகியோர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையானது காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொண்டது.
இந்த தகவலை காங்கிரஸ் பொது செயலாளர் அவினாஷ் அறிக்கையில் மூலம் உறுதி செய்தார். முன்னதாக ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசை கவிழ்க்க பேரம் பேசியது போன்ற மூன்று ஒலி பதிவுகளை கடந்த மாதம் வெளியாகின.
அதில் பன்வர்லால் சர்மா, விஷ்வேந்தர்சிங் ஆகியோருடன் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் பேரம் பேசுவது போல் பதிவுகள் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து விளக்கம் கேட்டு எம்எல்ஏக்கள் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு முன்னதாக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க தவறியதற்காக, சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியும் விஷ்ஷ்வேந்த சிங்கின் உள்ளிட்ட 3 பேரின் அமைச்சர் பதவியும் கடந்த 14ஆம் தேதி பறிக்கப்பட்டது.
தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பன்வர்லால் சர்மா, விஷ்வேந்தர்சிங் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் தற்போது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர பாஜக முடிவு செய்துள்ளது.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பிறகு பேரவை எதிர்க்கட்சித் தலைவர் குலாப் சந்த் கட்டாரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநில சட்டப்பேரவை ஆகஸ்ட் 14 ஆம் தேதி கூடும். அன்றைய தினமே, அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் அதற்குரிய தீர்மான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.