தெலுங்கு சினிமாவின் சிறந்த இயக்குனரான ராஜமௌலிக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Rajamouli Tested Corona Positive : உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா, இந்தியாவில், நாளுக்குநாள் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் பொதுமக்களையும் தாண்டி, அரசியல் பிரமுகர்கள், எம்எல்ஏக்கள், திரையுலக பிரபலங்கள்உள்ளிட்டோர் தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தெலுங்கு பட பிரபல இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலியும், அவரது குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
கடந்த சில தினங்களுக்கு முன்னால் எனக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கும் லேசான காய்ச்சல் வந்தது. அந்த காய்ச்சல் தானாகவே குணமடைந்தாலும், நாங்கள் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டோம்.
அந்த பரிசோதனை முடிவில் லேசான அளவில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்கள் ஆலோசனையின் படி நாங்கள் வீட்டிலேயே எங்களையே தனிமைப்படுத்திக் கொண்டோம். எந்த அறிகுறியும் இல்லாமல் நாங்கள் நலமாக உள்ளோம் ஆனால் நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் வழிமுறைகளையும் பின்பற்றுகிறோம் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்தெடுக்க காத்துக் கொண்டிருக்கிறோம்.
அப்போது தான், பிளாஸ்மா செல்களை தானம் செய்ய முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.