Raja Rani2 Serial Episode Update 21.10.21

சந்தியா வீட்டில் போலீஸ் வீட்டுக்கு வந்ததால் கடும் கோபத்தில் உள்ள சிவகாமி.

Raja Rani2 Serial Episode Update 21.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. வடகம் போட்ட விஷயத்தில் சிவகாமி திட்டியதை நினைத்து வருத்தப்படுகிறார் சந்தியா. இந்த நேரத்தில் அவருக்கு இன்ஸ்பெக்டரிடம் இருந்து போன் வருகிறது. பதறிப் போய் போனை எடுத்து பேசிய சந்தியாவுக்கு அவர் உங்கள் வீட்டிற்கு தான் வந்து கொண்டிருக்கிறோம். நீங்க அனுப்பிய மெசேஜ் பார்த்தேன் என கூறுகிறார். இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவேன் நேரில் பார்க்கலாம் என கூறிவிட்டு போனை வைத்து விடுகிறார்.

திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில், 24-ந்தேதி குடமுழுக்கு

பொலீஸ் வீட்டுக்கு வருவதை கண்டு அதிர்ச்சி அடைகிறார் சந்தியா. நான் எதையும் மெசேஜ் அனுப்புகிறேன் என அவர் நினைத்துக் கொண்டு போனை செக் செய்த போது அவரிடமிருந்து மெசேஜ் போலீசுக்கு சென்றுள்ளது. கை தவறி அனுப்பி இருப்பதை உணர்ந்த சந்தியா உடனே சரவணனுக்கு ஃபோன் செய்து வீட்டிற்கு வருமாறு கூறுகிறார்.

Maanaadu படத்தை வெளியிட விடாமல் கட்ட பஞ்சாயத்து பன்றாங்க – T. Rajendar ஆவேச பேட்டி | Silambarasan TR

இந்த பக்கம் வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் ஒருவர் வீட்டிற்கு வந்து தன்னுடைய பேரனுக்கு முதல் பிறந்தநாள் கொண்டாட இருப்பதாக அழைப்பு விடுத்து விட்டு வெளியே செல்கிறார். அந்த நேரத்தில் வீட்டிற்குள் போலீஸ் வருகிறது. சந்தியாவை பார்க்க வேண்டுமெனக் கூறியது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அதிர்ந்து போனார்கள். என்ன ஏது என விசாரிக்க பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக எங்களுக்கு புகார் ஒன்று வந்தது. அந்த பாஸ்போர்ட் சந்தியாவிடம் இருப்பதாக அவர் மெஸேஜ் செய்திருந்தார். அதை வாங்கிக்கொண்டு செல்லலாம் என்று தான் வந்தோம் என போலீஸ் கூறுகிறது.

அதன்பிறகு சந்தியாவிடம் நலம் விசாரித்த போலீஸ் பாஸ்போர்ட்டை கேட்க சந்தியா அதனை எடுத்து வந்து கொடுக்கிறார். அதன் பிறகு போலீஸ் அங்கிருந்து கிளம்ப உடனே சிவகாமி சந்தியாவை திட்டித் தீர்க்கிறார். இந்த நேரத்தில் சரவணனின் வந்துவிட இதையெல்லாம் நீ கண்டிக்க மாட்டியா என சரவணனையும் திட்டுகிறார். நான் அவ்வளவு தூரம் சொல்லியும் இந்த வேலையைப் பண்ணி இருக்காங்க அப்ப என்னுடைய வார்த்தைக்கு என்ன மரியாதை என கோபப்படுகிறார். பின்னர் சரவணன் சந்தியாவிடம் தனியாக பேசும் போது ஏன் இப்படி பண்ணீங்க என்று கேட்க சந்தியா நடந்ததை கூறுகிறார். இனிமே கொஞ்சம் பார்த்து நடந்துக்கோங்க. நீங்க செய்தது நல்ல விஷயம் தான் ஆனால் அம்மாவுக்கு உங்கள் மீது கோபம் அதிகமாகி கொண்டே செல்கிறது என்று கூறுகிறார்.

இரவில் ரூமிற்கு வந்த சிவகாமி தன்னுடைய கணவரிடம் இதுபற்றி புலம்ப அவர் சந்தியா நல்லது தான் செய்தாள். நாளைக்கு அவர் செய்தது சரி என்று தெரிந்ததும் நீ முகத்தை தொங்க போட்டுத்தான் வரப்போற. அன்னைக்கு பேசுகிறேன் என கூறுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்.