அர்ச்சனா வசமாக சிக்க சரவணன் கேட்ட கேள்வியால் செந்தில் பணத்தை எடுத்து நீட்டினார்‌.

Raja Rani2 Episode Update 11.01.22 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. செந்திலும் அர்ச்சனாவும் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது செந்தில் பணத்தை எடுத்து அர்ச்சனாவிடம் கொடுக்க என்னங்க இவ்வளவு கம்மியா இருக்கு என கேட்கிறார். இவ்வளவு நாளா சரவணன் இல்ல புடவை வாங்கினால் ஸ்வீட் ஃப்ரீனு சொன்னோம் அதனால கலெக்சன் நன்றாக இருந்தது. அதான் இப்போ சரவணன் வந்துட்டானே என கூறுகிறார். இன்னும் பத்து நாள் சென்னையில் இருந்து வந்திருக்கலாம் நம்ப பல்கா அமவுண்ட் பார்த்திருக்கலாம் என அர்ச்சனா சொல்ல நீ வேற சும்மா இரு சரவணன் கடைக்கு போய் கல்லாவைப் பார்த்து இருப்பான். கடையில் சர்க்கரையும் செல்வம் கண்டிப்பாக விஷயத்தைச் சொல்லி இருப்பார்கள் நானே என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கேன் என கூறுகிறார்.

நீங்க வாயை மூடிட்டு அமைதியா இருங்க இதை பத்தி பேசாதீங்க அவங்களா கேட்கும்போது பார்த்துக்கலாம் என அர்ச்சனா சொல்லிவிட்டு இருவரும் உள்ளே செல்லும்போது எதிரில் சரவணன் வந்து நிற்கிறார். வியாபாரம் எல்லாம் எப்படி போகுது செந்தில் எனக்கேட்க பரவால்ல என கூறுகிறார். ஸ்வீட் கடையில தான் கல்லா காலியா கிடக்கு, இதனையே ஒரு விஷயம் என்னன்னா போட்ட ஸ்வீட் எல்லாமே தீந்து போச்சு என கூறுகிறார்.

மேலும் சரவணன் இதுக்கான காரணம் என்னன்னு உனக்கு தெரியும் தானே என அர்ச்சனாவிடம் கேட்க எனக்கு எதுவும் தெரியாது மாமா என கூறுகிறார். புடவை வாங்கினால் ஒரு கிலோ ஸ்வீட் ட்ரீம்ஸ் சொன்னா கல்லா காலியா கிடக்காமல் இருக்க எப்படி இருக்கும் என கேட்கிறார். இப்படி செய்ய உங்களுக்கு எப்படி மனசு வந்தது? உங்கள நம்பி தானே கடையை விட்டுட்டு போனேன் என்று கேட்கிறார். இதுவும் உன்னுடைய கடைக்கு ஒரு விளம்பரமாக இருக்கும் என்று தான் செய்தோம் என செந்தில் சொல்ல குறுக்கு வழியில செய்றது எதுவுமே நிலைக்காது. பொருள் தரமாக இருந்தால் கண்டிப்பாக மக்கள் தேடி வருவாங்க என சரவணன் கூறுகிறார். இதுவரைக்கும் சிவகாமியின் பக்கம் அப்படித்தான் நடந்து வருகிறது என்று சொல்கிறார்.

செந்தில் உடனே அர்ச்சனா கையில் இருக்கும் பணத்தை வாங்கி சரவணன் இடம் கொடுக்க இந்த பணத்தை நீங்களே வெச்சுக்கங்க, இந்த விஷயம் வீட்டுல தெரியாதா என்ன நடக்கும் தெரியுமா என கேட்க அர்ச்சனா அதிர்கிறார். பிறகு நான் சொல்ல மாட்டேன் நீங்க சொல்லாம இருங்க என சொல்லிவிட்டு கடைக்கு சென்று விடுகிறார்.

பிறகு பார்வதி பாஸ்கரிடம் போனில் பேச நான் சரவணனுக்கு வாழ்த்து சொல்லும் சாக்கில் உன்னை பார்க்க வருகிறேன் என்று கூறுகிறார். சிவகாமி கிச்சனில் இருக்கப் கிச்சனுக்கு வந்த செந்தில் வழக்கத்துக்கு மாறாக இரண்டு மாதத்திற்கு தரவேண்டிய தன்னுடைய பங்கை கொடுக்கிறார். சிவகாமி ஒரே ஆச்சரியம் அடைகிறார்.

அதன் பிறகு இரவில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சரவணன் இன்னைக்கு கடையில் இருந்து பணத்தை எடுக்க முடியல நாளைக்கு கொடுத்து விடுகிறேன் என கூறுகிறார். சிவகாமி நீ எப்ப கொடுக்கறீங்க அப்போ கோடு என கூறுகிறார். பிறகு இந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை பற்றி பேசும் போது அது சரவணனுக்கு மட்டும் தான் அதில் வேறு யாருக்கும் எதுவும் கிடையாது என சிவகாமி திட்டவட்டமாக கூறி விடுகிறார்.

மேலும் சிவகாமி செலவுக்கு போதுமான பணம் தற்போது கையில் இருக்கிறது என சொல்ல யார் கொடுத்தது என எல்லோரும் கேட்க செந்தில் கொடுத்து விட்டான் என கூறுகிறார். அனைவரும் ஆச்சரியப்பட இன்னொரு விஷயம் சொல்றேன் கேளுங்க ரெண்டு மாசத்துக்கு தேவையான பணத்தை கொடுத்து விட்டான் என கூறுகிறார். உடனே அர்ச்சனா கோபப்படுகிறார். நான் திட்டம் போட்டு சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் இங்க தூக்கி கொடுத்திட்டிங்களா இன்னிக்கு இருக்கு உங்களுக்கு என மனதுக்குள் பேசிக் கொள்கிறார். பிறகு சரவணன் அப்பாவிடம் ஆதி அப்படி பேசியதைப் பற்றி கூறி ஆதிக்கு அறிவுரை சொல்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.