பணத்தை மொத்தமாக திருடிய ஆதி உற்சாகமாக ஆட்டம் போடுகிறார்.
Raja Rani2 Episode Update 26.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் பணத்தை திருடியது அதை வைத்து நடு இரவில் ஆட்டம் போடுகிறார். இதை வைத்து காஸ்ட்லியான போன், பைக், சுற்றுலா விதவிதமான சாப்பாடு என ஜாலியாக என்ஜாய் செய்ய வேண்டும் என திட்டம் போடுகிறார். ஆனாலும் கொஞ்ச நாளைக்கு அமைதியாக அடக்கி வாசிக்க வேண்டும் என நினைக்கிறார்.
இந்தப் பக்கம் சிவகாமி அமர்ந்து கொண்டு பணத்தை திரும்ப யாரும் வைக்கவில்லை என அழுது கொண்டு இருக்கிறார். இந்த வீட்டுக்குள்ளேயே இப்படி ஒரு திருடன் இருக்கிறானே என கண்கலங்கி அழுகிறார். பிறகு பார்வதி எக்ஸாமுக்கு கிளம்ப ஆதி ஆபீசுக்கு கிளம்பி விடுகிறார்.
இந்தப் பக்கம் அர்ச்சனா காபி குடித்துக் கொண்டிருக்க திடீரென அவர் வாந்தி எடுக்கிறார். பிறகு 10 நாட்கள் தள்ளிப் போய் இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைகிறார். இப்ப யாரு குழந்தையை கேட்டது இப்ப வந்து நிற்கிற என வயிற்றில் வளரும் குழந்தையை திட்டுகிறார்.
சிவகாமி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அவருக்கு ஆறுதல் கூறுகிறார் சந்தியா. பணம் போனது கவலை இல்லை ஆனால் வீட்டில் இருப்பவரை திருடி இருப்பதை நினைத்து தான் சரவணன் நொந்து போகிறார். பணத்தை திருடியது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். போலீசில் புகார் அளித்து விடலாம் என சந்தியா சொல்ல சிவகாமி அதெல்லாம் வேண்டாம் என கூறுகிறார். இந்த வீட்டுக்குள்ள இன்னொரு முறை போலீஸார் பற்றியும் பேசக்கூடாது. போலீஸூம் வர கூடாது என்று கூறுகிறார்.
பிறகு சந்தியாவுக்கு அவருடைய அண்ணன் போன் செய்து அண்ணியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதாக கூறுகிறார். சந்தியா சந்தோஷமடைந்து வாழ்த்துகிறார். பிறகு அவருடைய அண்ணன் உன்னுடைய ஐபிஎஸ் கணவர் பற்றி வீட்டில் பேசிட்டியா என கேட்கிறார். அதற்கான நேரம் இன்னும் வரல என சந்தியா சொல்ல சீக்கிரம் பேசி அப்பா அம்மாவோட கனவை நிறைவேற்றணும் என கூறுகிறார். சந்தியாவும் சரி என கூறி போனை வைக்கிறார்.