சிவகாமி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க செந்திலிடம் வசமாக சிக்கியுள்ளார் அர்ச்சனா.

Raja Rani2 Episode Update 23.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. ஃப்லைட் டிக்கெட் தொலைந்துபோன துக்கத்தில் சிவகாமி வருத்தப்பட்டு அமர்ந்து கொண்டு இருக்க அவருடைய கணவர் ரவி ஏன் இப்படி உக்காந்திட்டிருக்க என கேட்கிறார். என்னால உங்கள மாதிரி எல்லாம் இருக்க முடியாது. என் பிள்ளை ஆசை பட்டது நடக்கும் என்று வருத்தமா இருக்கு என புலம்புகிறார். சிவகாமி பேசுவதை உள்ளே இருந்து கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறார் அர்ச்சனா.

தாணுமாலய சாமி கோவில் : மார்கழி திருவிழாவுக்கு, பந்தல் கால் நாட்டு நிகழ்ச்சி

இந்த நேரத்தில் சந்தியாவும் சரவணனும் வந்து அத்தை இப்படியே இருக்காதீங்க. நீங்க இப்படி உடைஞ்சு போனா உங்க புள்ளைக்கு யாரு ஆறுதல் சொல்வது என சந்தியா சொல்ல அர்ச்சனா ஒரு வழியா இந்த வார்த்தை உங்களுக்கு நினைச்சது கிடைக்கப்போவது இல்லை என ரூமிற்குள் சந்தோஷப்படுகிறார். யாரும் வருத்தப்படாதீங்க யார் மேலயும் தப்பு இல்ல நம்மளோட அதிர்ஷ்டம் அவ்வளவு தான் என சரவணன் கூறுகிறார். இந்த நேரத்தில் செந்தில் ஏன் எல்லாரும் எப்படி இருக்கீங்க என கேட்க மயிலு சரவணன் அய்யா ஒரு போட்டியில கலந்துக்க வந்த இன்விடேஷனல் காணவில்லை என கூறுகிறார். உடனே செந்தில் அர்ச்சனாவை பார்க்க அவர் எனக்கு எதுவும் தெரியாது என கை அசைக்கிறார்.

பிறகு சரவணன் கடைக்கு கிளம்ப சாப்பிட்டு விட்டு போங்க என சந்தியா கூறுகிறார். இல்ல நீங்க எல்லோரும் சாப்பிடுங்க எனக்கு பசி இல்ல நான் அப்புறம் சாப்பிடுவேன் என சரவணன் கூறிவிட்டு சென்றுவிடுகிறார். சிவகாமி என் புள்ள எவ்வளவு வருத்தப்பட்டு போறான்னு பாருங்க என கவலைப்படுகிறார். இவர்தான் தொலைத்துவிட்டார் நீ எனக்கு தோணுது என தன்னுடைய கணவர் பற்றி சிவகாமி சொல்ல அவர் நான் தொலைக்கவில்லை உன் கண் எதிரே தானே பார்வதி கிட்ட கொடுத்தேன் அப்போ அர்ச்சனா கூட அங்க தான் இருந்தா. பிறகு மயிலு பார்வதி கிட்டதான் கொடுத்தாங்க. அவங்க பீரோல வச்சத நான் கூட பார்த்தேன் அப்போ அர்ச்சனா அம்மா இருந்தாங்க என மயிலு சொல்ல உடனே அர்ச்சனா வந்து ஆமா இன்னைக்கு ரொம்ப நாலு பேரு தானே இருந்தோம் மாமா மேல தப்பு இல்லை என கூறுகிறார்.

Maanaadu படத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் – முதல்வருக்கு வேண்டுகோள் வைத்த தயாரிப்பாளர்! 

சிவகாமி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க செந்தில் நீங்க இப்படி பாதிக்கப்பட்ட அவ இன்னும் தான் கஷ்டப்படுவான் சாப்பிடுங்க என கூப்பிட எனக்கு எதுவும் வேண்டாம் நீங்க போய் சாப்பிடுங்க என சொல்ல சிவகாமியின் கணவர் இவளை நான் பார்த்துக்குறேன் நீங்க போய் சாப்பிடுங்க என அனைவரும் அங்கிருந்து கிளம்புகின்றனர்.

இந்த பக்கம் பார்வதிக்காக பாஸ்கர் காத்துக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் அவருக்கு விக்கியிடம் இருந்து போன் வருகிறது. குற்றாலம் போகலாம் சொல்லி இருந்தேன் வாங்க என கூப்பிட நான் வரவில்லை எனக்கு சாயங்காலம் ஒரு வேலை இருக்கு இன்னொரு நாள் போகலாம் என கூறி விடுகிறார். விக்கியின் நண்பர் அவன் இங்க தான் இருக்கான் அவனுக்கு எதுக்கு போன் பண்ணி பேசுற என கேட்க அவனும் பார்வதியும் இனி சந்திக்கவே கூடாது. அவங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் நாசமாக போகணும் என கூறுகிறார்.

பிறகு மயிலு எல்லோருக்கும் சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டிருக்க. சந்தியா நான் எல்லோரையும் கூப்பிடுகிறேன் என சொல்லும் நேரத்தில் அர்ச்சனா வர அர்ச்சனாவிடம் செந்தில் வரலையா என கேட்கிறார். வருவாரு வந்துட்டீங்க சும்மா தானே இருக்கணும் அத்தை சாப்பிடாம இந்த வீட்டுல என்னைக்கு சாப்பிட்டுட்டு இருக்காங்க என சொல்ல அந்த நேரத்தில் செந்தில் வர நீயும் செந்திலும் சாப்பிடுங்க என கூறி விட்டு அனைவரையும் அழைக்க செல்கிறார். பிறகு நான் அவருக்கு சாப்பாடு கட்டி எடுத்துட்டு போறேன் அவர் சாப்பிட்ட அத்தையை சாப்பிடுவது என சந்தியா சொல்லிவிட்டு மற்றவர்களை அழைத்துச் செல்கிறார். செந்தில் நீங்க சரவணனுக்கு சாப்பாடு எடுத்துட்டு போங்க இவ எல்லாரையும் கூட்டிட்டு வரட்டும் என அர்ச்சனாவை சொல்ல அர்ச்சனா நான் எதுக்குப் போகணும் என கூறுகிறார். பிறகு செந்தில் முறைக்க அர்ச்சனா சரி போறேன் என போகிறார்.

சந்தியா ஆதியை அழைக்க அம்மா இங்க சாப்பிடாமல் இருக்காங்க எங்களை எதுக்கு சாப்பிடக் கூப்பிடுறீங்க என கூறுகிறார். பிறகு செந்திலும் வந்து அவருடைய அம்மாவை சாப்பிட வாங்க என சொல்ல எனக்கு எதுவும் வேண்டாம் என கொஞ்ச நேரம் தனியா விடுங்க நீங்க போய் சாப்பிடுங்க என கூறுகிறார். எல்லாம் உன்னால தான் வந்தது சந்தியா என சந்தியாவை அர்ச்சனா கோர்த்து விடுகிறார். இதுக்குத்தான் அத்தை போட்டி எல்லாம் ஒன்னும் வேண்டாம் என இருந்தாங்க நீ சரவணன் மாமாவை போட்டியில கலந்துக்க வைக்கிறேன்னு சொல்லிட்டு இப்படி எல்லாரையும் கஷ்டப்படுத்துற அர்ச்சனா எரியும் தீயில் எண்ணெயை ஊற்ற செந்தில் அவரை திட்டுகிறார். பிறகு சிவகாமி அர்ச்சனாவை திட்டுகிறார். கோள் மூட்டி விடுற வேலையை இதோட நிறுத்திக்க என கூறுகிறார்.

தான் கெட்ட பெயர் வாங்கினாலும் பரவாயில்லை தன்னுடைய புருஷன் திறமைக்கு மதிப்பு மரியாதை கிடைக்கணும்னு தான் சந்தியா இதை செய்தா என கூறுகிறார். சரவணனுக்கு நீ சாப்பாடு எடுத்துட்டு போ. நீங்க போய் சாப்பிடுங்க நான் சந்தியா வந்ததும் அவளோடு சேர்ந்து சாப்பிடுகிறேன் என்று சிவகாமி கூறுகிறார்.

பிறகு சந்தியா சரவணனுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு கடைக்குச் செல்ல அங்கே சரவணன் எனக்கு வேண்டாம் என கூறுகிறார். சரவணன் அண்ணாவுக்கு வேண்டாம் என்றால் எனக்கும் வேண்டாம் என சர்க்கரை சொல்கிறார். நமக்கு அதிர்ஷ்டம் இல்லை என சரவணன் சொல்ல எல்லாம் நல்லதுக்கு என்று எடுத்துக்க வேண்டியதுதான். போட்டி நடக்கும் இடத்தில் போய் இதை விட பெரிய பிரச்சனை நடக்க இருந்து அதனை கடவுள் தடுப்பதற்காகத்தான் இப்படி செய்தார் என நினைத்துக் கொள்ளலாம். சரவணன் போட்டிக்கு போய் கலந்துக்கிட்டு வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. நம்மிடம் இன்னும் நேரம் இருக்கு என சந்தியா கூறுகிறார். எனக்கு சரவணனும் ஒரு அளவிற்கு மனதைத் தேற்றிக்கொண்டு சாப்பிட சம்மதம் தெரிவிக்கிறார்.

இந்த பக்கம் அர்ச்சனா ரூமில் அமர்ந்து நடக்கும் விஷயங்களை எண்ணி மகிழ்கிறார். அப்போது சாக்லேட் சாப்பிட்டு உற்சாகத்தை கொண்டாடுகிறார். இந்த நேரத்தில் செந்தில் உள்ளே வர அர்ச்சனா பார்வதி செஞ்ச தப்புக்கு அவளை யாருமே எதுவுமே சொல்லல இதுவே நான் செய்திருந்தால் எல்லாரும் ரவுண்டு கட்டி திட்டி இருப்பாங்க என சொல்ல எனக்கும் அதே சந்தேகம் தான். இந்த வீட்ல இந்த மாதிரி வேலையெல்லாம் உன்னைத் தவிர வேறு யாரும் செய்ய மாட்டாங்க. பொறுமையா கேட்கும்போதே உண்மைய சொல்லு. என்ன வச்சு கிட்டேன் நீ என்னென்ன வேலை எல்லாம் செஞ்சு இருக்க. இப்போ மட்டும் நீ உண்மைய சொல்லல இனி நான் உன் கிட்ட பேசவே மாட்டேன் என கூறுகிறார். இவரை குளிர்விக்க ஏதாவது செய்யவேண்டுமே என அர்ச்சனா யோசிக்க இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.