மீண்டும் சந்தியாவை சிவகாமியிடம் சிக்க வைக்க பார்த்த அர்ச்சனாவுக்கு கடைசியில் அதிர்ச்சி காத்திருந்தது.

Raja Rani2 Episode Update 13.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2.ஹேனா தன்னுடைய யூடியூப் சேனல் லைவ்வில் சிவகாமியை சமையல் செய்ய வைக்கிறார். தென்காசி முழுவதும் மிகவும் பிரபலமான வத்த குழம்பு வைத்து அசத்துகிறார் சிவகாமி. கிச்சனில் என்ன ஒரே சத்தமாக இருக்கு என அர்ச்சனா அங்கு வந்து பார்க்க அனைவரும் ஒன்றாக நின்று கொண்டு பேசி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

முதலில் சரவணன் மாமாவை உன்பக்கம் இழுத்த, அடுத்து பார்வதி இப்போ அத்தை. எங்க வீட்டுக்காரரும் அண்ணி அண்ணின்னு உன்னை தூக்கி வைத்து கொண்டாடுகிறார். இதை இப்படியே விடக்கூடாது முதல்ல இவங்க எல்லாரையும் கலைக்கணும் என அர்ச்சனா திட்டம் போடுகிறார். பிறகு அர்ச்சனா அங்கே போனதும் எங்க நீங்க ஆளைக்காணோம் என ஹேனா கேட்கிறார். இல்லைங்க கடைக்குப் போயிருந்தேன் என சொல்ல ஸ்வீட் கடைக்கா என கேட்க இல்ல அது சரவணன் மாமா கடை, நாங்க சின்னதா ஒரு ஜவுளி கடை வைத்திருக்கோம் என கூறுகிறார். அப்படியா சூப்பர் என ஹேனா கூறுகிறார்.

அதன் பிறகு சல்மா மற்றும் ஹேணா ஆகியோர் பார்வதியுடன் சேர்ந்து சரவணன் கடைக்கு செல்கின்றனர். அங்கு சென்று சரவணன் செய்த ஸ்வீட் மற்றும் பலகார வகைகளை சாப்பிட்டு விட்டு அசந்து போகின்றனர். ஒத்த ஆளாக இவ்வளவையும் செய்ததை கேட்டு வியந்து போகின்றனர். பிறகு சரவணனுக்கு ஒரு கிப்ட் கொடுக்கின்றனர்.

மேலும் இந்த ஊரில் சுற்றிப் பார்க்க என்ன இருக்கிறது எனக் கேட்க தென்காசி பற்றிய பெருமைகளை சரவணனும் பார்வதியும் கூறுகின்றனர். பிறகு ஒரு வேனை ஏற்பாடு செய்து அனைவரும் சென்று சுற்றிப் பார்க்கலாம் என கூறுகின்றனர்.

இந்தப் பக்கம் அர்ச்சனா சிவகாமியிடம் என்ன அத்தை அவங்க தான் உங்ககிட்ட சமையல் பத்தி கேட்கிறார்கள் நீங்களும் எல்லாத்தையும் அப்படியே சொல்றீங்க. அவங்க போடுற வீடியோவுக்கு பணம், அதெல்லாம் உங்க கிட்ட சொன்னாங்களா? உங்ககிட்ட இருந்து எல்லா வித்தையும் கத்துகிட்டு அடுத்த முறை சரவணன் மாமா போட்டியில் கலந்து கொள்ளும் போது அவரை ஜெயிக்க விடாமல் செய்வததற்கு அவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். இந்த போட்டியிலேயே மாமா ஜெயிக்க கூடாது என எண்ணலாம் செய்தார்கள் தெரியுமா எனக் கேட்கிறார். இதெல்லாம் சந்தியாவிற்கு தெரியுமா என சிவகாமி கேட்க தெரியாமல் எப்படி இருக்கும் என கூறுகிறார் அர்ச்சனா.

இந்த சந்தியாவை பற்றி ஒரு நாள் நீங்க புரிஞ்சுக்க தான் போறீங்க என அர்ச்சனா சொல்ல, நான் இந்த வீட்ல யார் எப்படின்னு நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கேன். அவங்க தப்பான நோக்கத்துடன் இங்க வந்து இருந்தா அவங்க நிழல் கூட இந்த வீட்டுக்குள்ள பட்டிருக்காது. சந்தியா அதை அனுமதித்திருக்க மாட்டா. அப்படியே பிரச்சினை வந்தாலும் அதை சந்தியா பார்த்துப்பா. நீ உன் வேலையை பாரு என கூறிவிட்டு சிவகாமி அங்கிருந்து கிளம்புகிறார். சிவகாமியின் பேச்சைக் கேட்டு அர்ச்சனா அதிர்ச்சி அடைகிறார்.

இந்தப் பக்கம் ஆதி ஊரிலிருந்து வந்தவர்கள் எடுத்து வந்த போன் லேப்டாப் மற்றும் ஹெட்போன் ஆகியவற்றை எடுத்து பார்த்து எவ்வளவு காஸ்ட்லி என பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது வந்த சிவகாமி இதெல்லாம் எதுக்கு நீ எடுக்கல இதெல்லாம் ஊர்ல இருந்து வந்தவங்களோடது என கூறுகிறார். ஆதி இந்த போனோட விலை ஒன்றரை லட்சம் இதே மாதிரி நானும் ஒரு போன் பண்ணனும் என சொல்ல சிவகாமி வருமானத்திற்கு ஏற்ற மாதிரி தான் செலவு செய்யனும். அதுக்கு மேல செஞ்சா அது ஆடம்பரம் என திட்டுகிறார். என்ன புரிஞ்சதா என ஆதியிடம் கேட்டு விட்டு அங்கிருந்து அவர் கிளம்புகிறார்.

பிறகு ஆதி நினைத்த பொருளை வாங்க முடியல, ஒரு டூர் பாக்க முடியல என்ன வாழ்க்கை இது என கடுப்பாகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.