Raja Rani2 Episode Update 08.12.21

அர்ச்சனா செய்த சதியால் சமையல் போட்டியில் சொதப்பினார் சரவணன்.

Raja Rani2 Episode Update 08.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலை போட்டிக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து போட்டியாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். தொகுப்பாளினி நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததோடு நடுவர்களை வரவேற்கிறார். மேலும் இந்த போட்டிக்கு சிறப்பு விருந்தினராக மோகன் வைத்தியாவை வரவேற்கிறார்.

அதன்பிறகு போட்டியாளர்களுக்கும் போட்டிக்கான டென்ஷன் இருப்பது நன்றாகவே தெரிகிறது. ஆனால் இந்த முதல் ரவுண்டில் போட்டியாளர்கள் அனைவரும் அவர்களின் ஃபேவரைட் டிஸ்ஸை சமைக்கலாம். அது என்ன என்பதை நீங்களே தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என கூறி விடுகிறார்.

பத்மாவதி தாயார் கோவில் : இன்று பஞ்சமி தீர்த்தம், நாளை புஷ்ப யாகம்

போட்டியாளர்கள் என்ன செய்வது என குழம்பிப் போகின்றனர். சரவணனிடம் என்ன செய்வது என செந்தில் கேட்க தெரியல என்ன செய்யலாம் என கேட்கிறார். அதற்கு செந்தில் உனக்கு எது நல்லா வருமோ அதை செய் என கூறுகிறார். அர்ச்சனா நமக்கு எது நல்லா வரும் என்பதை விட ஜட்ஜஸ்க்கு எது பிடிக்குமோ அதைச் செய்யணும் என அர்ச்சனா சொல்கிறார். சந்தியா அப்படி இல்லை நமக்கு இது நன்றாக தெரியும் அதை செய்தால் போதும் என கூற சரவணன் ஜிலேபி செய்வதாக கூறுகிறார். அதுதான் எனக்கு தூக்கத்திலிருந்து செய்ய சொன்னாலும் சரியாக வரும் என கூறுகிறார்.

தியேட்டர் மூடிடுவாங்கன்னு பயமா இருந்தது – Actor Gautham Karthik OpenTalk | Anandam Vilayadum Veedu

அதன் பிறகு அனைவருக்கும் கரண்ட் அடுப்பு கொடுக்கப்படுகிறது. சரவணன் அதில் எப்படி செய்வது என குழம்ப போட்டி குழுவினர் அவருக்கு சொல்லித் தருகின்றனர். சரவணனும் ஜிலேபி செய்யத் தொடங்கிய நிலையில் அர்ச்சனா ஒரு நிமிஷம் பாத் ரூம் போயிட்டு வரேன் என செந்திலிடம் சொல்லிவிட்டு பின் பக்கமாக சென்று சரவணன் சமைக்கும் அடுப்பின் பவர் கனெக்சனை கட் செய்து விடுகிறார். இதனால் சரவணன் செய்து ஜிலேபி ஒரு மாவாகவே இருக்கிறது. அடுப்பு வேலை செய்யவில்லை என சந்தியாவிடம் கூறுகிறார்.

அதன் பிறகு சரவணன் எதையாவது செய்து சமைத்து விடலாம் என முயற்சி செய்வதற்கு நேரம் முடிந்து விடுகிறது. நடுவர்கள் ஒவ்வொருவரின் டிஸ்ஸாக சுவைத்துப் பார்த்து கமெண்ட்டுகளை கூறி வருகின்றனர். சரவணன் செய்த ஜிலேபி சாப்பிட்டு பார்த்து வெறும் மாவாக இருக்கிறது எனக் கூறிவிடுகின்றனர். இதனால் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். சரவணன் சொதப்பியதால் ஆதி மற்றும் அர்ச்சனா ஆகியோர் சிரிக்கின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.