அர்ச்சனா செய்த திருட்டு வேலையால் அதிர்ச்சி அடைந்துள்ளார் சரவணன்.

Raja Rani2 Episode Update 07.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சரவணன் யோசனையில் அமர்ந்து கொண்டிருக்க அவரது அப்பா சாப்பாட்டைப் பற்றி பேசிவிட்டு பிறகு வாழைப்பழம் சாப்பிடலாமா எனக் கேட்க சரவணன் வேண்டாம் என அங்கிருந்து எழுந்து சென்றார். டேய் என்னடா எதுக்கு இப்படி சோகமா இருக்கே என கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லை என கூறுகிறார். நல்லவனா இருக்கிறது தப்பு இல்ல ஆனா ரொம்ப நல்லவனா இருந்தா கடைசில உன்னை ஏமாற்றி விடுவார்கள் மனசுல பட்டதை பேசிடு அது சரியோ தவறோ அதுக்கு அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என கூறுகிறார்.

அதன்பிறகு சரவணன் கடையில் வியாபாரம் எப்படி இருக்கும்னு நினைக்கிறேன் என கேட்க வழக்கத்தை விட ரொம்ப நன்றாக இருந்திருக்கும் என கூறுகிறார். அது என்னவோ சரிதான் ஆனா கல்லாவில் தான் காலியா இருக்கு என சொல்கிறார். அது எப்படிடா விலை தெரியாம கடையில் இருக்காங்க வித்துட்டாங்களா என்று கேட்கிறார். அதெல்லாம் இல்ல, இலவசமா கொடுத்துட்டாங்க என சொல்ல அதிர்ச்சி அடைகிறார் அவருடைய அப்பா. ஆனா கொடுத்தது அவங்க இல்ல அர்ச்சனா. அவங்க கடையில ஒரு படம் எடுத்தா இங்கே ஒரு கிலோ ஸ்வீட் ஃப்ரீ என கொடுத்திருக்காங்க. இங்கே இந்த வேலையை பண்ணிட்டு இருக்கான் அங்க வந்து நம்ம கிட்ட சந்தோஷமா சிரிச்சு பேசிட்டு இருந்திருக்காங்க என சரவணன் சொல்கிறார்.

இது எவ்வளவு பெரிய தப்பு குடும்பத்தார் உங்களை நம்பி தானே கடையை விட்டு விட்டு வந்தோம். ஆனால் இவங்களே இப்படி பண்ணினா எப்படி இது செந்திலுக்கு தெரியுமா என கேட்க அவனுக்கு தெரியாமல் எப்படி இருக்கும் என சரவணன் கூறுகிறார். இப்பவே இது சிவகாமி கிட்ட சொல்லி ஒரு பஞ்சாயத்து வச்சாகணும் என கூறுகிறார். உடனே சரவணன் அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல நான் பார்த்துக்கிறேன் என கூறுகிறார். இதை பத்தி யார்கிட்டயும் எதையும் பேசாதீங்க என கூறுகிறார்.

அதன்பிறகு சந்தியா சரவணன் ஜெயித்தது நினைத்து சந்தோஷப் பட்டுக் கொண்டிருக்க அந்த நேரத்தில் உள்ளே வந்த சரவணன் சந்தியாவிடம் பேசி மகிழ்கிறார். உங்களுடைய ஆசிரியர் சொல்லுங்க அது நான் கண்டிப்பா நிறைவேற்றுவேன் என சொல்ல சந்தியா தன்னுடைய ஐபிஎஸ் கனவு பற்றி சொல்லலாமா வேண்டாமா என யோசிக்கிறார். இப்போதைக்கு வேண்டாம் என சமாளித்து விடுகிறார். அத்தையோட மனசுல இடம் பிடிக்கணும் என்பதுதான் என்னுடைய கனவு அது இப்போ நடந்துடுச்சு என சொல்கிறார்.

இந்த பக்கம் சிவகாமியும் அவரது கணவனும் சரவணன் ஜெயித்த பணத்தை யாரும் எதுவும் செய்யக் கூடாது அதை மொத்தமாக இந்தியாவுக்கும் சரவணனுக்கும் சேர வேண்டியது என கூறுகிறார். சரவணன் நெனச்சா சந்தோஷமா இருக்கு அதே சமயம் கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கு இந்த வயசுல கிடைக்கவேண்டியது எதுவுமே அவனுக்கு கிடைக்கல என்று வருத்தப்படுகிறார். பிறகு அது ஜூஸ் கொடுத்துக்கொண்டிருக்க அது என்னது எனக்கேட்ட சிவகாமி ஆரஞ்சு ஜூஸ் என சொல்கிறார். பிறகு அதை கொடுத்து பார்த்த சிவகாமி இது இந்த ஹோட்டலில் குடித்தது போலவே இல்லை அது நன்றாக இருந்தது எனச் சொல்கிறார்.

அது நாளைக்கு உங்களுக்கு நான் போட்டு தருகிறேன் என கூறுகிறார். பிறகு மறுநாள் செல்வம் கையில் பேப்பருடன் வீட்டிற்கு ஓடி வந்து அனைவரையும் கூப்பிடுகிறார். பேப்பரில் சரவணனின் போட்டோவுடன் நியூஸ் வந்து இருப்பதை பார்த்து வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் பெருமையாக பேச அர்ச்சனா கடுப்பாகிறார். இதுதான் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.