சரவணன் கையில் விவாகரத்து நோட்டீஸ் சிக்கிக்கொள்ள அதற்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார் சந்தியா.

Raja Rani 2 Update 08.09.21 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. பார்வதி நிச்சயதார்த்தத்துக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகின்றன. சரவணன் தன் அப்பா சந்தியாவிற்கு உண்மையை உடைக்க இருந்ததை தடுத்து நிறுத்தினார்.

வேளாங்கண்ணி பேராலய தேர்பவனி : இன்று, அன்னை பிறந்த நாள் விழா

அதன்பிறகு ரூமில் சந்தியா ஹேண்ட் பேக்கில் டிவோர்ஸ் பேப்பர் இருப்பதை பார்க்கிறார். அதன்பிறகு சந்தியா வந்ததும் கையில் பணம் இல்லை உங்க கிட்ட இருந்தால் கொஞ்சம் தாங்க என கேட்கிறார். உடனே சந்தியா இது ஒரு தரேன் என ஹாண்ட் பேக்கில் இருந்து பணம் எடுக்கப் போய் விவாகரத்தும் நோட்டீசை வெளியே எடுக்கிறார்.

உடனே அதை மறைக்க முயற்சி செய்கிறார் சந்தியா. ஆனால் சரவணன் அதை புடுங்கி என்ன ஏது என விசாரிக்க விவாகரத்து நோட்டீஸ் என கூறுகிறார் சந்தியா. அதன்பிறகு சந்தியாவிடம் எதுவும் பேசாமல் அதை கொடுத்து விட்டு நிச்சயதார்த்தம் முடிந்ததும் இதைப் பற்றிப் பேசிக் கொள்ளலாம் என அந்த இடத்தை விட்டு கிளம்பி விடுகிறார். சந்தியா என்ன செய்வது ஏது செய்வது என தலையில் அடித்துக் கொள்கிறார். நிச்சயம் முடிந்ததும் சரவணன் கிட்ட இதை நான் வாங்கிட்டு வந்த விவாகரத்து பேப்பர் இல்லை அனிதா வலுக்கட்டாயமாக கொடுத்து அனுப்பியது என சொல்லிவிட வேண்டும் என கூறுகிறார்.

Superstar Rajinikanth-யை அடுத்து இயக்கபோவது யார்? – குழப்பத்தில் ரசிகர்கள்! 

சிவகாமி மற்றும் குடும்பத்தார் அனைவரும் மாப்பிள்ளை வீட்டில் இருந்து எப்போது வருவார்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இன்னைக்கே கல்யாணத்துக்கு நாள் குறித்து விட வேண்டும் என சிவகாமி கூற சந்தியா இப்போதைக்கு பார்வதி படிக்கட்டும் படிப்பு முடிந்து ஒரு வருஷம் ஆனது கல்யாணம் பண்ணிக்கலாம் சொல்லுங்க அத்தை என கூறுகிறார். என்னோட படிப்பு எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு எல்லா விஷயத்திலேயும் மூக்கை நுழைக்காதே என சந்தியாவை திட்டி விடுகிறார் சிவகாமி. ‌

அந்த சமயத்தில் செந்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டதாக கூறுகின்றனர். பின்னர் மாப்பிள்ளை வீட்டார் வந்த பிறகு பார்வதியை அழைத்து வருகின்றனர். பார்வதியின் வருங்கால மாமியார் அவருக்கு சுடிதார் மற்றும் நகைகளை கொடுத்து மாற்றி வருமாறு கூறுகிறார். பார்வதியின் உடையை மாற்றிக் கொண்டு வருகிறார். பின்னர் இரண்டு குடும்பத்தாரும் தட்டு மாற்றிக் கொள்கின்றனர். அதன் பின்னர் பார்வதி மற்றும் பாஸ்கர் இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்கின்றனர்.

தன்னுடைய தங்கச்சி வாழ்க்கை போயிடுச்சு என்ற வேதனையோடு மோதிரம் மாற்றுவதை பார்க்கிறார் அர்ச்சனா. இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.