ராஜா ராணி 2 சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து பார்க்கலாம் வாங்க.
Raja Rani 2 Update 06.09.21 : தமிழ் சின்னத்திரையும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. போலி போலீசை அடையாளம் கண்டு அவர்களை போலீசாரிடம் சிக்க வைத்தார் சந்தியா. இதனையடுத்து கமிஷனர் சந்தியாவை நேரில் அழைத்து பாராட்டினார். இதனையடுத்து சந்தியா பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார்.
செப்டம்பர் 17-ந்தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் : பேரவையில், முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சந்தியா பேட்டி கொடுப்பதை பார்த்த பார்வதி வீட்டிலுள்ள எல்லோரிடமும் கூறி டிவியை வைக்கிறார். செய்தி முடியும் நேரத்தில் டிவி வைப்பதால் முழுமையாக பார்க்க முடியவில்லை. இதற்கிடையில் சந்தியாவும் சரவணனும் வீடு வருகின்றனர்.
பின்னர் மீண்டும் செய்து பார்க்கின்றனர் சரவணன் தனக்கு தலை வலிப்பது போல இருப்பதாக கூறிவிட்டு உள்ளே சென்று விடுகிறார். மற்றவர்கள் அனைவரும் டிவி பார்க்க அர்ச்சனா சந்தியா அப்படி என்ன சாதித்து விட்டா என உள்ளுக்குள் பேசிக் கொள்கிறார். பின்னர் சந்தியாவின் மாமனாரும் வீட்டில் உள்ளவர்களும் அவரை பாராட்டுகின்றனர்.
டிவியில் கமிஷனர் சரவணன் சந்தியாவை வீட்டிலேயே வைத்துக் கொள்ளாமல் வேலைக்கு அனுப்புங்க எனக் கூறியதைக் கேட்ட சரவணன் அம்மா சரவணன் நிலைமையை எண்ணி எண்ணி கவலைப்படுகிறார். பார்வதிக்கு அர்ச்சனை செய்த துரோகத்தால் இன்னமும் செந்தில் அவரிடம் பேசாமல் இருந்து வருகிறார்.
எல்லாரும் சந்தியாவை பாராட்டியதை வைத்து அர்ச்சனா பெட்ரூமுக்குள் சென்று திட்டி தீர்க்கிறார். இதையெல்லாம் காதில் வாங்காமல் காதுக்கு பஞ்சு வைத்துக் கொண்டு போன் நோட்டுகிறார் செந்தில். அர்ச்சனா பேசி முடித்ததும் பஞ்சியை எடுத்து வெளியே போட்டுவிட்டு தரையில் படுத்துக் கொள்கிறார் செந்தில். அர்ச்சனா மேல வாங்க என கூப்பிட செந்தில் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். ஒரு கட்டத்தில் கருப்பாக்கி அவரை தள்ளி விட முயற்சித்து அர்ச்சனா செந்தில் மேல் விழுகிறார். அப்பவும் அர்ச்சனா மீது கோபம் தணியாமல் தரையிலேயே படுத்துத் தூங்குகிறார் செந்தில்.
என்னை Comali-யா மாத்த பாக்கறீங்க..,அறுத்து கிழிச்சிடுவ – G.P.Muthu-வின் கலக்கல் Shopping.!
சரவணன் வீட்டிற்கு பின்புறத்தில் கட்டிலில் அமர்ந்து ஏதோ ஒரு யோசனையில் இருக்க சந்தியா வருவதைப் பார்த்து உடனே படுத்து தூங்குவது போல நடிக்கிறார். சந்தியா அவரை எழுப்பும் உயர்ந்து சரவணன் எழுந்துக் கொள்ளவில்லை. இதனையடுத்து பெச்சிட் எடுத்த வந்து போர்த்தி விடுகிறார். போகிற நேரத்தில் என் மேல இப்படி பாசத்தை கொட்டுறீங்களே என கண்ணீர் விடுகிறார் சரவணன்.
இதனை அடுத்து மறுநாள் காலை பார்வதியின் நிச்சயத்திற்காக அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக நடைபெறுகிறது. கிச்சனில் வேலை செய்யாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அத்தனை அவருடைய மாமியார் திட்டுகிறார். அதன் பிறகே உள்ளே வரும் சரவணன் சமையல் வேலையை தான் கவனித்துக் கொள்வதாக கூறி விடுகிறார்.
ஸ்வீட் என்ன செய்யலாம் என அவருடைய அம்மா கேட்க அல்வா செய்யலாம் என சரவணன் கூற அதற்கு நேரமில்லை என அவருடைய அம்மா கூறுகிறார். வரை மாப்பிள்ளையே அல்வா கொடுக்கிறதுல நம்பர் ஒன் என மனதிற்குள் கூறிக் கொள்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட்.