Raja Rani 2 Serial Update 07.09.21

பார்வதியின் முகத்தில் கொதிக்கும் டீயை ஊற்ற திட்டம் போட்டு சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டார் அர்ச்சனா.

Raja Rani 2 Serial Update 07.09.21 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. பார்வதியின் நிச்சயதார்த்திற்காக வீட்டில் ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெறுகிறது. அலங்கார வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கும் சந்தியா பூஜையறையில் பூமாலை தொங்கவிட ஸ்டூல் மீது ஏறி வேலை செய்தபோது திடீரென தவறிய பார்க்கிறார். அப்போது சரவணன் ஓடிப் போய் அவரை தாங்கிப் பிடிக்கிறார்.

தடைகளை தகர்க்கும் வெள்ளை விநாயகர் எப்படி தோன்றினார்?

உங்களால என்ன வேலை முடியுமோ அதை மட்டும் செய்யுங்க ஒவ்வொரு முறையும் உங்களை வந்து காப்பாற்றிட்டு இருக்க முடியாது என சரவணன் கூறிவிட்டு அந்த இடத்திலிருந்து கிளம்புகிறார். அதன் பிறகு சக்கரையுடன் சேர்ந்து தோரணங்களை தொங்க விடும் வேலை செய்கிறார். ஸ்டூலை கெட்டியாக பிடித்துக்கடா சக்கரை என கூறிவிட்டு நிலை ஏறுகிறார் சந்தியா. ‌‌‌

நடிகர்களுக்கு 100 கோடி 50 கோடி சம்பளம்…இது ஏழைகள் நாடு – Director Velu Prabhakaran Speech

அந்த சமயத்தில் போன் ரிங்காக அதனை எடுப்பதற்காக செல்கிறார் சர்க்கரை. மீண்டும் ஸ்டூலில் இருந்து நழுவி சந்தியா கீழே விழ சரவணன் ஓடிப்போய் பிடிக்கிறார். பின்னர் சக்கர ஊம்பு வந்து அண்ணி கீழே விழுந்துட்டீங்களா என கேட்கிறான். ஓ ஹீரோ மாதிரி அண்ணா உங்களை வந்து படித்து விட்டாரா என சக்கர கலாய்க்கிறான்‌.

இதனையடுத்து அர்ச்சனா செந்தில் எடுத்து வந்து கொடுக்க புடவைகளைப் பார்த்து வருகிறார். என் தங்கச்சி வாழ்க்கை கெடுத்தது மட்டுமல்லாமல் வருமானத்தையும் கெடுத்துட்டாங்க என புலம்புகிறார். எந்த ஒரு புடவைகளை விலைப்பட்டியல் இல்லாததை பார்த்த அர்ச்சனா அதில் விலைப்பட்டியலை ஒட்டிட்டா மாப்பிள வீட்ல பிரச்சனை பண்ணுவாங்க என அதற்கு திட்டம் போடுகிறார். அதற்குள் சிவகாமி வந்து புடவைகளை எடுத்து ரூமில் வைத்து இந்த பிளான் இருக்கு முட்டுக்கட்டை போடுகிறார். மேலும் பார்வதிக்கு டீ போட்டுக் கொடுத்து விட்டு மேக்கப் போட்டு விடுமாறு அர்ச்சனாவிடம் கூறுகிறார்.

பார்வதிக்கு எடுத்துச் செல்லும் அர்ச்சனா அதனை பார்வதி முகத்தில் ஊற்றி விட்டால் முகம் கெட்டுப் போய்விடும். அதன்பிறகு நிச்சயதார்த்தம் நின்று விடும் என திட்டம் போட்டு முகத்தில் ஊற்ற முயற்சி செய்தபோது அதனை பார்வதி தெரியாமல் தட்டி விட அர்ச்சனாவின் மீது கொட்டி விடுகிறது. உடனே சாரி கேட்டு மருந்து எடுத்து வர பார்வதி செல்கிறார். திட்டம் போட்டதும் பார்வதி முகத்தில் ஊற்றாமல் இப்படி சொந்த காசுல சூனியம் வச்சிக்கிட்டேன் என புலம்புகிறார் அர்ச்சனா.

இதனையடுத்து அலங்கார வேலையில் நிறுத்திவிட்ட சந்தியாவை அவரது மாமனார் அழைத்து பேசுகிறார். சரவணன் எடுத்துள்ள முடிவு குறித்து சொல்ல முயற்சிக்கும் நேரத்தில் சரவணன் டீயை கொட்டி அவருடைய அப்பாவை சொல்ல விடாமல் தடுக்கிறார். என்னப்பா செய்றீங்க என கேட்க சந்தியாவுடைய சந்தோஷத்துக்காக இதை செய்து தான் ஆகணும் என கூறுகிறார். நீ செய்தது தப்புடா சரவணா என அவருடைய அப்பா கூறியும் தன்னுடைய முடிவில் உறுதியாக உள்ளார் சரவணன். இத்துடன் இருக்கிறது இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்.