Raja Rani 2 Serial Episode Update

பஸ் கிளம்பியதும் சந்தியாவை தேடி ஓடுகிறார் சரவணன்.

Raja Rani 2 Serial Episode Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சந்தியாவின் பையில் விவாகரத்து பத்திரத்தை பார்த்த சரவணன் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடிவு செய்து அனைவரும் பேச்சையும் கேட்காமல் சந்தியாவை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். சந்தியா வெளியே சென்றால் தான் நன்றாக இருப்பார் என இந்த முடிவை எடுக்கிறார் சரவணன்.

சந்தியாவை அழைத்து கொண்டு பஸ்ஸில் ஏற்றி விடுகிறார். சந்தியா நான் பிரிந்து செல்வதில் உங்களுக்கு எந்த வருத்தமும் இல்லையா என கேட்கிறார். சரவணனும் இறுதி நேரத்திலாவது நம்முடைய காதலை சொல்லி விடலாமா என யோசித்துக் பின்னர் அதனை சொல்லாமல் மறைத்து விடுகிறார். சந்தியாவும் பொது இடமாக இருந்தாலும் பரவாயில்லை ஐ லவ் யூ என கூறி விடலாமா என யோசிக்கிறார். ஆனால் அவரும் சொல்லவில்லை. இறுதியில் பஸ் கிளம்பி விடுகிறது. சந்தியா அழுதுகொண்டே செல்கிறார்.

பஸ்ஸில் ஏற்றி விட்டு வீட்டிற்கு திரும்பிய சரவணன் இன்று சந்தியாவை பிரிய முடியாமல் ஒரு மணி நேரமாவது அவரைப் பார்த்துக்கொண்டே செல்லலாம் என ஓடிச்சென்று பஸ்ஸில் ஏறி கொள்கிறார். இருவரும் பிரிவைத் தாங்க முடியாமல் அழுது கொண்டே இருக்கின்றனர்.

சோமவார தினத்தில், சந்திரனுக்கு சிவன் தந்த அடைக்கலம்.!

வீட்டில் சரவணனின் அப்பா எல்லா பிரச்சனைக்கும் நீயும் ஒரு காரணம் என சிவகாமியை திட்டித் தீர்க்கிறார். நீ எதுவுமே பண்ணல என கூறுகிறார். நான் என்ன பண்ண முடியும்னு அவன் ஒரு முடிவு எடுத்துட்டு அதுல உறுதியாய் இருக்கான் என கூறுகிறார். பின்னர் அந்தத் தெருவில் இருக்கும் யாரோ ஒருவர் வந்து நடந்ததைப் பற்றி கேட்கிறார்.

தெரியாம கொஞ்சோம் நாள் Hero-வா நடிச்சுட்டேன்! – Actor Anandraj Funny SPeech | IDIOT Press Meet

சந்தியா இந்த குடும்பத்தின் மேல அவ்வளவு பாசமா இருந்தா. ஆனா நீ கொஞ்ச நஞ்சமா செஞ்ச. எல்லாப் பழியையும் சந்தியா மேல போட்டு அவளை எவ்வளவு கொடுமை படுத்தின. அவ இடத்துல வேற யாராச்சும் இருந்தா உன் பையனை பிரிச்சு கூட்டிட்டு போய் இருப்பாங்க. இல்லனா இந்த வாழ்க்கையே வேணாம்னு தூக்கிப்போட்டு போயிருப்பாங்க. இனியாவது சந்தியா சந்தோஷமாய் இருக்கட்டும் என கூறிவிட்டு அந்த இடத்திலிருந்து கிளம்புகிறார்.

அர்ச்சனா அவருடைய கணவர் செந்திலிடம் நான் செய்தது பெரிய தவறு தான் என்னை மன்னிச்சிடுங்க. என் தங்கச்சி மேலே இருந்த பார்த்ததில்லை பார்வதிக்கு பெரிய துரோகம் செய்துவிட்டேன் என காலைப் பிடித்துக்கொண்டு அழுகிறார். அர்ச்சனா காலை பிடித்து அழுததும் செந்தில் அவரை மன்னித்து விட்டு இன்னொரு முறை இந்த மாதிரி ஏதாவது செய்தால் என் வாழ்க்கையிலேயே நீ இருக்க மாட்டார் என கூறுகிறார். அதன் பின்னர் இருவரும் சமாதானம் அடைகின்றனர். இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட்.