பார்வதியின் வாழ்க்கையைக் கெடுக்க மீண்டும் அர்ச்சனா விக்கி உடன் சேர்ந்து புது திட்டம் ஒன்றை போடவுள்ளார்.

Raja Rani 2 Serial Episode Update 27.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. கனவைக் கண்டு மயங்கி விழுந்த பார்வதியுடன் அவருடைய ரூமில் தூங்கச் சென்ற சந்தியா அவருக்கு ஆறுதல் கூறுகிறார். இது எல்லாத்தையும் மறந்து விட்டு அனைவரிடமும் சகஜமாக பேசு என கூறுகிறார். மறுநாள் காலையில் சரவணன் கையிலிருந்த மெட்டியை கழட்டி ஒரு சட்டை பாக்கெட்டுக்குள் வைத்ததை நினைவுபடுத்தி அந்தச் சட்டையை தேடுகிறார். பின்னர் சந்தியா இதைத்தானே தேடுறீங்க என அந்த மெட்டியை கொடுக்கிறார். இத போட்டுட்டு இருந்தா நீ என்னோட இருக்கிற மாதிரி இருக்கும் என சரவணன் கூற சந்தியா அந்த மெட்டியை கையில் போட்டு விடுகிறார்.

கோர்ட்டுக்குள் பிரபல ரவுடி சுட்டுக்கொலை : 2 பேர் கைது

பின்னர் அர்ச்சனா சிவகாமியின் நம்பர் பார்வதி எப்போதும் போனும் கையுமாக இருந்து மாப்பிள்ளை கிட்ட பேசிகிட்டே இருக்கா. நான் எவ்வளவு சொல்லியும் அவ கேட்கல நீங்க கொஞ்சம் சொல்லுங்க என மாமியாரிடம் போட்டு கொடுக்கிறார். அதன் பின்னர் அர்ச்சனா கடைக்குச் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் விக்கி அவருக்கு போன் செய்கிறார். போனை எடுக்க மறுக்கிறார் அர்ச்சனா. மீண்டும் விக்கி போன் செய்ய போனை எடுத்த அர்ச்சனா உனக்கு என்ன வேணும் எதுக்கு எனக்கு போன் பண்ணுன என கேட்கிறார்.

அவரை தவிர அந்த தகுதி வேறு யாருக்கும் இல்லை! – மேடையில் Snehan ஓபன்டாக் | HD

அதன் பின்னர் விக்கியிடம் பார்வதியின் திருமணத்தை நிறுத்த திட்டமிடுவது ஏன் என்று கூறியுள்ளார். பார்வதி திருமணம் என்றால் பாஸ்கருக்கு எனது தங்கச்சிக்கு திருமணம் நடக்கும் என அர்ச்சனா கூறுகிறார். அதே போல் நடந்தால் பார்வதியை நீ திருமணம் செய்து கொள் என விக்கியிடம் சொல்கிறார். இருவரும் சேர்ந்து புது திட்டத்தை போட பிளான் போடுகின்றனர்.

இன்னொருபுறம் சந்தியாவின் தோழி அவரை சந்தித்து நலம் விசாரிக்கிறார். மேலும் சரவணனிடம் என்னுடைய ஐபிஎஸ் கனவு குறித்து சூட்டோடு சூடாக பேசி விடு என கூறுகிறார். முதலில் அப்புறம் பேசுகிறேன் என குரு சந்தியாவை அவருடைய தோழி இப்பவே பேசு என அறிவுரை கூற சந்தியாவை உடனே பேசி விடுகிறேன் வீட்டிற்கு கிளம்புகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்.