சரவணனிடம் அவருடைய அப்பா சத்தியம் ஒன்றை வாங்கியுள்ளார்.

Raja Rani 2 Serial Episode Update 24.09.21 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. வீட்டில் நடந்த முடிந்த பிரச்சனைக்குப் பிறகு சரவணன் வெளியே அமர்ந்து எல்லா பிரச்சனையும் முடிந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்து கொள்கிறார். இந்த நேரத்தில் அவருடைய அப்பா வந்து அவருக்கு எதிரில் அமர்ந்து என்ன சரவணா சந்தோசமா இருக்க போல. சந்தோசமா இருக்கிறது தான் உன் முகத்துல தெரியுது என கூறுகிறார்.

திருச்செந்தூர் சாமி தரிசனம் : கூடுதலாக 3 மணி நேரம் அனுமதி

மேலும் இனிமேல் இது மாதிரி நீயா ஒரு முடிவெடுத்து எதையும் செய்யாதே என அறிவுரை வழங்குகிறார். சந்தியாவுக்கு எது பிடிக்கும் என்பதை அவளுடைய கனவை நனவாக்க முயற்சி செய் என கூறுகிறார். அதை செய்து காட்டுவேன் எனக்கு சத்தியம் செய்து கொடு என கூறி சத்தியம் வாங்கிக் கொள்கிறார்.

அதன் பிறகு சந்தியாவும் சரவணனும் ரூமிற்குள் பேசிக்கொள்கின்றனர். படுத்துக்கொள்ள பாய் எடுக்கச் சென்ற சரவணனைத் தடுத்து பெட்டிலேயே படுத்து கொள்ளுமாறு சந்தியா கூறுகிறார். இருவருக்குமிடையே ரொமான்ஸ் நடக்கிறது.

இன்னொரு பக்கம் செந்தில் இடம் அர்ச்சனா நாளைக்கு என்ன நாள் எனக் கேட்க ஒரு கல்யாண ஆர்டர் எடுத்தோம்ல அதை டெலிவரி பண்ண வேண்டிய நாள் என கூறுகிறார். தன்னுடைய பிறந்தநாளை கணவர் மறந்து விட்டதால் கடுப்பாகிறார் அர்ச்சனா. அதன் பின்னர் செந்தில் ஒருவழியாக அர்ச்சனாவை சமாதானப்படுத்தி நாளைக்கு படத்துக்கு போகலாமென கூறுகிறார்.

சுவையான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?

இந்த நேரத்தில் பார்வதி ரூமிற்குள் அவருடைய முன்னாள் காதலன் வந்து அவளைக் கொல்ல முயற்சி செய்வது போல கெட்ட கனவு கண்டு கண் வைத்துக் கொள்கிறார் பார்வதி. இதனையடுத்து அவர் ஓடிச்சென்று சரவணன் ரூம் கதவைத் தட்டி சந்தியாவை கட்டியணைத்துக் கொண்டு ஆடுகிறார். கெட்ட கனவு கண்டதாக கூறுகிறார். தூங்கவே பயமாயிருக்கு என சொல்லவே சரவணன் சந்தியாவை பார்வதியுடன் படுத்துக் கொள்ளுமாறு கூறுகிறார். சந்தியாவும் பார்வதியுடன் அவருடைய ரூமிற்கு செல்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.