Raja Rani 2 Serial Episode Update 13.10.21

சரவணனை அடி வெளுத்து வாங்கியுள்ளார் சந்தியா.

Raja Rani 2 Serial Episode Update 13.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சரவணனுக்கு சந்தியா பைக் ஓட்ட சொல்லித்தரும் போது கிரவுண்டில் சரவணனை அடிக்கவும் கிள்ளவும் செய்கிறார். சரவணன் சந்தியா பைக் ஓடிக்கொண்டிருக்கும் அந்த வழியாக வந்த சிவகாமி முதலில் சரவணன் வேறு ஒரு பெண்ணிடம் பைக் ஓட்ட கற்றுக் கொண்டு இருப்பதாக நினைத்துக் கொண்டுள்ளார். சந்தியா சரவணன் அடிப்பதை பார்த்து இன்னொரு பெண்மணி கலிகாலம் ஒரு ஆம்பளைக்கு ஒரு பொம்பள பைக் ஓட்ட சொல்லித் தரா. இதை ஏன் நானே பாத்துட்டு இருக்க என சிவகாமியிடம் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

பேட்மிண்டன் ஆட்டம் : இந்திய அணி அபாரம்..மேலும், தொடர்ந்து இன்று மோதல்..

இந்தப் பக்கம் பாஸ்கரை பார்க்கச் சென்றிருந்த பார்வதி அவரிடம் கோபப்படுகிறார். பின்னர் பாஸ்கர் கையிலிருந்த மோதிரம் எங்கே என்னை கேட்க டைட்டா இருக்கும்னு கழட்டி வைத்த எங்க இருக்குன்னு தெரியல வீட்ல தான் இருக்கும் பார்க்கணும் என கூறிவிட்டு அவரிடம் கோபப்பட்டு அங்கிருந்து கிளம்புகிறார். வீட்டிற்கு வந்த அவர் போனில் பேசிக்கொண்டிருக்கும் போது பார்வதி கோபமாக வந்து போனை பிடுங்கி கொள்கிறார்.

பொண்ணு Ready.., திருட்டு கல்யாணத்துக்கு புடவை வாங்கும் Pugazh மற்றம் Bala..! | Velavan Stores | HD

அதன்பிறகு வீட்டில் கணவர் படித்துக்கொண்டு இருந்த பேப்பரை பிடிங்கி கசக்கி போடுகிறார். இந்த வீட்ல என்ன நடக்குதுனு ஏதாச்சும் இருக்க கவனிக்கிறீர்களா என கணவரிடம் கோபப்படுவது மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள அனைவரிடமும் கோபமாக பேசுகிறார். இந்த நேரத்தில் சந்தியாவும் சரவணனும் பைக்கில் வந்து இறங்குகின்றனர். சந்தியா சுடிதாரில் இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். சுடிதாரை மாற்றாமல் வந்துவிட்டதை நினைத்து சந்தியா தவிக்கிறார். அர்ச்சனா வேறு சந்தியாவை சுடிதாரில் இருப்பது பற்றி கோர்த்து விடுகிறார். சந்தியா தான் பைக் ஓட்ட சொல்லிக் கொள்வதை ஏன் மறைத்த என சரவணனிடம் சண்டையிடுகிறார். இவ வந்து இந்த வீட்டுல இருக்க எல்லாத்தையும் சொல்லிட்டா என கூறுகிறார். அதன்பிறகு சரவணன் சிவகாமியிடம் சென்று அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். இப்போ உனக்கு என்னுடைய மனைவிதான் முக்கியம். நான் இரண்டாவது இடத்துக்கு வந்துட்டேன்ல எனக் கூறுகிறார். ஐயோ அப்படி எல்லாம் இல்ல மா என கூறி அவரை ஒரு வழியாக சமாதானப்படுத்தி ஒரு ஐந்து நிமிடம் என்னுடன் வாங்க என கூறிக்கொண்டு பைக்கில் உட்கார சொல்கிறார். உனக்கு சரியா ஓட்ட தெரியாது இதுல என்ன உட்காற சொல்றியா நான் வரலப்பா என பதறுகிறார் சிவகாமி. என்னோட ரொம்ப நாள் ஆசை மா உட்காருங்க என உட்கார வைக்கிறார் சரவணன். பயந்துகொண்டே உட்கார்ந்த சிவகாமி சரவணனை கெட்டியாக பிடித்துக் கொள்கிறார். சிவகாமி உட்கார வைத்துக் கொண்டு சென்றதை பார்த்த அவருடைய கணவர் டேய் சரவணா என் பொண்டாட்டி டா என்று பதறுகிறார்.

சரவணனின் சிவகாமியின் பைக்கில் சென்று கொண்டிருக்க திடீரென வண்டி நின்று விடுகிறது. என்ன ஏது என்று தெரியாமல் குழம்பிய சரவணன் அதன் பின்னர் பெட்ரோலை ஆன் செய்யவில்லை என்பதை கண்டுபிடித்து மீண்டும் பயணம் தொடர்கிறார். சரவணா நீ நல்லா வண்டி ஓட்டுற.. உன்னை நினைச்சா பெருமையா இருக்கு என கூறுகிறார் சிவகாமி. இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்.