புதிதாக பைக் வாங்கிய சரவணனுக்கு சந்தியா எதிர்பாராத ஷாக் கொடுத்துள்ளார்.

Raja Rani 2 Serial Episode Update 08.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. பைக் வாங்குவதற்காக சரவணனும் சந்தியாவும் கடைக்கு சென்று ஒரு பைக்கை தேர்வு செய்கின்றனர். பைக்கை யார் ஓட்டிச் செல்வது என சரவணன் கேட்கிறார். முதலில் சந்தியா அமைதியாக இருக்கிறார். அதன் பின்னர் என்னுடைய தம்பி ஆதியை அனுப்புகிறேன் அவனிடம் பைக்கை கொடுத்து அனுப்புங்கள் என சரவணன் கூறுகிறார். சந்தியா அதெல்லாம் வேண்டாம் என கூறி விடுகிறார். பின்னர் ஒரு ஐந்து நிமிடம் காத்திருங்கள் எனக் கூறி விட்டு கீழே செல்கிறார்.

நவராத்திரி : வீட்டுக்குள் நிகழும் ஒரு கொலு திருவிழா

இந்தப் பக்கம் அர்ச்சனா நாம ஒரு பைக் வாங்கலாம் என கூறுகிறார். செந்தில் வீட்டுக்கு கொடுக்க பணம் இல்லை ஆனால் பைக் வாங்க காசு இருக்கா என அம்மா கேட்பார்கள் அதெல்லாம் வேண்டாம் என கூறுகிறார். எங்கப்பா வாங்கி கொடுத்ததாக சொல்லிவிடலாம் என அர்ச்சனா கூறுகிறார். நான் உழைச்சு என்னுடைய காசுல வாங்கனும் ஆனா பேரு உங்க அப்பாவுக்கு அப்படி ஒன்னும் எனக்கு வண்டியே தேவையில்லை என சரவணன் கூறுகிறார்.

கலைஞருக்கு பெயர் வைத்தது எங்க அப்பா தான்! – Actor Radha Ravi Bold Speech | Maayon Teaser Launch

இன்னொருபுறம் பார்வதி அவருடைய வருங்கால கணவர் பாஸ்கருக்காக காத்துக் கொண்டிருக்கிறார். பாஸ்கர் பார்வதியை வெளியே அழைத்துச் செல்கிறார். ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாக பார்வதியிடம் கூறுகிறார்.

சந்தியா புடவை மாற்றிக்கொண்டு சுடிதாரில் வந்து சரவணவனை ஆச்சரிய படுத்துகிறார். அதன் பின்னர் பைக் டெலிவரிக்கு தயாராக இருப்பதாக சொன்னதை அடுத்து சாவியை வாங்கிக்கொண்டு பைக்கில் அமர்கிறார் சந்தியா. நீங்க ஓட்ட பாருங்களேன் எனக்கு பயமா இருக்கு நான் வரல என கூறுகிறார் சரவணன். உக்காருங்க என சந்தியா மிரட்டியது உட்காருகிறார்.

இருவரும் பைக்கில் ஒன்றாக ஜாலியாக செல்கின்றனர். ஊருக்குள் சென்றதும் சிவகாமி அங்கிருக்கும் பெண்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். தனது மாமியாரை பார்த்ததும் ஷர்க்கான சந்தியா வண்டியை நிறுத்தி விடுகிறார். அதன் பின்னர் இருவரும் வேறு ஒரு வழியில் அவருக்கு தெரியாமல் வண்டியில் செல்கின்றனர். இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்.