Raja Rani 2 Serial Episode Update 06.10.21

தியேட்டரில் குடும்ப மானமே போச்சு என சந்தியா சரவணனை திட்டி தீர்த்துள்ளார் சிவகாமி.

Raja Rani 2 Serial Episode Update 06.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. குடும்பத்தோடு படம் பார்க்கப்போன இடத்தில் ரவுடி பசங்க 3 பேர் அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு பெண்களை புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தனர். இதனை தட்டி கேட்டபோது அந்த பெண்ணை அப்பாவிடம் அந்த இளைஞர்கள் தரக்குறைவாக நடந்து கொண்டதையடுத்து சந்தியா வீட்டில் உள்ள அனைவரையும் படம் பார்க்க உள்ளே அனுப்பிவிட்டு ஒரு பொய்க் காரணத்தை கூறி விட்டு இந்த சண்டையை தட்டி கேட்டார்.

‘சென்னை அணி ஜெயிக்கணும்’ : டோனி மகள் பிரார்த்தனை..வைரலானது பதிவு..

உள்ளே சென்ற குடும்பத்தார் சந்தியா இன்னும் காணவில்லை என காத்துக் கொண்டிருந்தனர். அதன்பின்னர் சரவணன் எல்லோரையும் உள்ளே அனுப்பிவிட்டு சந்தியாவை தேடி வெளியே வந்தார். அப்போது சந்தியா சண்டையிட்டுக் கொண்டு இருப்பதை பார்த்து சென்று சரவணன் அங்கு வந்த இளைஞர்களை அடித்து விரட்டிவிட்டு சந்தியாவை தியேட்டருக்குள் அழைத்து வந்து காலியாக இருந்த கடைசி இரண்டு சீட்டில் அமர்ந்தனர்.

Beast படத்தின் அடுத்தடுத்த 3 அப்டேட்கள் – இந்த மாதத்தில் கொண்டாட தயராகுங்கள்! | THalapathy VIjay

திடீரென சந்தியாவின் கண்ணில் ஏதோ தூசி விழுந்து அவர் கண்ணை தேய்த்துக் கொண்டே இருக்க சரவணன் என்னாச்சு என கேட்க கண்ணில் தூசி விழுந்து விட்டது என சந்தியா கூறுகிறார். பின்னர் சரவணன் சந்தியாவின் கண்ணிலிருந்து தூசியை எடுப்பதற்காக ஊதுகிறார். இதனைப் பார்த்து தவறாக புரிந்துகொண்ட சிவகாமி அங்கிருந்து பாதியிலேயே படம் பார்க்காமல் வீட்டிற்கு கிளம்பி வந்தார். சிவகாமி வீட்டிற்கு போய் பார்த்து அனைவரும் பின்னாடியே படம் பார்க்காமல் எழுந்து வந்து விட்டனர்.

வீட்டிற்கு வந்தபோது அண்ணி சந்தியாவையும் சரவணனையும் திட்டி தீர்த்தார்‌. எங்கே எப்படி நடந்துக்கணும்னு உங்க ரெண்டு பேருக்கும் தெரியாதா என திட்டினார். அவ்வளவு பேர் இருக்கிற இடத்தில் அசிங்கமும் இல்லாம அப்படி எப்படி இருக்க முடியுது எனக் கேட்க கண்ணில் தூசி இருந்தது அதை தான் எடுத்தேன் என சரவணன் கூறுகிறார். நீ உன் பொண்டாட்டிய காப்பாற்ற என்ன வேணாலும் பொய் சொல்லுவ என சரவணனை திட்டுகிறார் சிவகாமி. பின்னர் அவர் உள்ளே சென்றுவிட சரவணன் அப்பா நடந்ததற்காக மன்னிப்பு கேட்கிறார்.

சந்தியா என்ன செய்வது என தெரியாமல் அதிர்ச்சியாகிறார். இத்துடன் முடிகிறது என்ற பெயர் ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்.