சரக்கு அடித்துவிட்டு சந்தியாவை திட்டியுள்ளார் சிவகாமி. ஆனால் கடைசியில் காத்திருந்தது தான் ட்விஸ்ட்.
Raja Rani 2 Episode Update 22.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சிவகாமிக்கு ஆரஞ்சு ஜூஸ் என நினைத்தேன் சரக்கை கொடுத்து விடுகிறார் நடந்த கணவன். சரக்கு அடித்து விட்டு இன்னொரு டம்ளர் வேண்டும் என கேட்கிறார் சிவகாமி. உடனே அவருடைய கணவர் வாங்கி வரச் சென்று ஆரஞ்சு ஜூஸ் கேட்டபோது அது ஆரஞ்சு ஜூஸ் இல்லை சரக்கு கலந்த ஜூஸ் என கூறுகின்றனர். இதனால் அவர் அதிர்ச்சி அடைகிறார்.
பிரதமர் மோடி படத்தை நீக்கக் கோரிய வழக்கு : மனுதாரருக்கு அபராதம்
இந்த பக்கம் மேடையில் சந்தியாவும் சரவணனும் நடனமாடிக் கொண்டிருக்க அதனை பார்த்த சக போட்டியாளர் ஒருவர் சரவணனை புகழ்கிறார். அதன்பிறகு இருவரும் ஆடிக்கொண்டிருக்க அருகில் ஆடியோ ஒருவர் சந்தியாவின் காலை மிதித்து விடுகிறார். இதனையடுத்து அவரை வெளியே கொண்டு வந்து அமர வைத்த சரவணன் அவருடைய காலுக்கு ஸ்ப்ரே அடித்து மசாஜ் செய்து விடுகிறார்.
இந்த பக்கம் அர்ச்சனா ஜூஸ் என நினைத்து சரக்கை வாங்கி குடிக்க முயலும் நேரத்தில் செந்தில் வந்து அதை தடுத்து விடுகிறார். இது ஜூஸ் இல்ல சரக்கு முகர்ந்து பாரு என கூறுகிறார். வீட்ல ஏற்கனவே நீ சரக்கு கொடுத்துவிட்டு பண்ண ஆர்ப்பாட்டம் போதாதா என திட்டுகிறார். அது வீடு இங்க பாதி மட்டும் குடித்து கொள்கிறேன் என அர்ச்சனா கேட்கிறார். அதெல்லாம் வேண்டவே வேண்டாம் செந்தில் சொன்னான் இந்த பாருங்க ஆதி மட்டும் குடிக்கிறான் என அர்ச்சனா போட்டு கொடுக்கிறார். பிறகு செந்தில் ஆதியை குடிக்க விடாமல் தடுத்து விடுகிறார்.
இந்த பக்கம் போதையில் சிவகாமி முதலில் அர்ச்சனாவை திட்டுகிறார். என் பையன் படிக்காதவன் அவனுக்கு படிக்காத பொண்ணு கட்டி வைக்கனும்னு நினைச்சேன். ஆனால் தானே படிக்காதவனு சொல்லி என் புள்ள தலையில் கட்டிவைத்து விட்டான். எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல என திட்ட அர்ச்சனா சந்தோஷப்படுகிறார். கடைசியில் நான் நினைச்ச மாதிரி இல்ல அத விட ஒரு படி மேல இருக்கா என சந்தியாவை புகழ தொடங்குகிறார். வீட்ல இருக்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து பண்ணுறா. வெறும் கல்லாய் இருந்த என் சரவணனுக்கு தட்டி தட்டி சிலையா இந்த இடத்திற்கு கொண்டு வந்து இருக்கா எனக்கு கொள்ள அர்ச்சனா அப்படியே சோர்ந்து போகிறார்.
என் பொண்ணு பார்வதிக்கு ஒரு அம்மாவா இருக்கா என சிவகாமி சந்தியாவை புகழ்ந்து கொண்டே போக அவர் சந்தோஷத்தில் கண் கலங்குகிறார். பிறகு சிவகாமியை ஒருவழியாக சமாதானம் செய்து ரூமிற்கு கூட்டி செல்கின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.