சந்தியாவின் கையில் வசமாக சிக்கியுள்ளார் அர்ச்சனா.

Raja Rani 2 Episode Update 01.02.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. வீட்டில் யாரும் இல்லாததால் எல்லாரும் எங்க போனாங்க என தேடிக் கொண்டிருக்கிறார் சிவகாமி. அர்ச்சனா உங்க அம்மாவை பார்க்க போயிட்டா சந்தியா கடைக்கு போயிட்டு ஏகப்பட்ட வேலை இருக்கு என சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் சிவகாமி கடைக்கு போன் செய்கிறார். சரவணன் போனை எடுக்க கடையில் நல்ல கூட்டம்தான் சந்தியா என்ன பண்றா? அவளை வீட்டுக்கு அனுப்பலாம்ல என கேட்கிறார். சந்தியா கடைக்கு வருவதாக சொல்லிவிட்டு வெளியே சென்ற இருப்பதை புரிந்து கொண்ட சரவணன் பணம் வாங்குவதற்காக சந்தியா வெளியே சென்று இருக்கிறார்கள் என கூறுகிறார். பிறகு சந்தியா கடைக்கு வருவதாக சொல்லிவிட்டு எங்கே போயிருக்கிறார் என யோசிக்கிறார் சரவணன்.

போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த சந்தியாவுக்கு அந்த அந்த நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன் வருகிறது. நீங்கள் கேட்ட ஃபைல் கிடைத்துவிட்டது வந்து அய்யாவை பார்த்துவிட்டு விவரங்களை வாங்கிச் செல்லுங்கள் என ரைட்டர் கூறுகிறார். உடனே வருகிறேன் என சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார்.

அங்கு இட்ஸ் பிரியா என்ற மெயிலில் இருந்து தான் புகார் வந்திருக்கிறது. மேலும் புகார் வந்த இடத்தை பற்றிய முகவரியை போலீசார் கூறியதைக் கேட்டு சந்தியா அதிர்ச்சி அடைகிறார். அர்ச்சனாவின் அம்மா இருக்கும் ஊரில் இருந்து தான் அவருக்கு புகார் வந்துள்ளது என புரிந்து கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

இந்தப் பக்கம் செந்தில் அர்ச்சனாவுக்கு பிரியாணி வாங்கி வந்து கொடுத்து சாப்பிடச் சொல்கிறார். மேலும் தனது தங்கச்சிக்கு போன் செய்து வீட்டுப்பக்கம் போயிட்டு அம்மாவுக்கு இப்ப கொஞ்சம் உடம்பு பரவாயில்ல என சொல்லிட்டு வா என சொல்லி இருக்கேன் என கூறுகிறார். செந்தில் பயமாக இருக்கிறது எனச் சொல்ல அதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என அர்ச்சனா கூறுகிறாள்.

அர்ச்சனா சொன்னபடியே அவருடைய தங்கச்சி வீட்டுக்குச் சென்று சந்தியாவின் மாமனார் மாமியிடம் தன்னுடைய அம்மா பற்றி கூறுகிறார். அங்கே அவர்களுக்கு சந்தேகம் எதுவும் இல்லை எனத் தெரிந்ததும் அங்கிருந்து கிளம்புகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பிறகு வெளியான ப்ரோமோவில் அர்ச்சனாவின் தங்கை சந்தியாவிடம் சிக்குகிறார். சந்தியா உண்மைகளை சொல்ல அதிர்ச்சி அடைகிறார் அர்ச்சனாவின் தங்கச்சி. எதுவாக இருந்தாலும் குற்றாலத்து போயிருக்க எங்க அக்கா வந்ததும் கேட்டுக்கோங்க என கூறுகிறார். அத்தையே போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போனது நீ அர்ச்சனா உங்க அம்மாவும் தானா என கேட்க ஆமாம் என்று ஒப்புக் கொள்கிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.