கிளாசுக்கு போன சந்தியாவை ரவுண்டு கட்டி கொண்டால் அடிக்கின்றனர் இளைஞர்கள்.

Raja Rani 2 Episode Update 31.03.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் போலீஸ் கோச்சிங் கிளாசுக்கு இதனால் சென்ற சந்தியாவை புடவையில் பார்த்ததும் ஸ்டாஃப் என நினைத்து அனைவரும் எழுந்து குட் ஈவினிங் கூறுகின்றனர். அதன்பிறகு சந்தியா நானும் ஸ்டூடண்ட் தான் படிக்க வந்திருக்கிறேன் என கூற முதியோர் கல்வி படிக்கிற வயசுல எதுக்கு இந்த வேலை? வீட்ல இருக்கிற வேலையை பார்க்க வந்த விட்டுட்டு ஏன் இங்க வந்தீங்க என கிண்டல் அடிக்கின்றனர். போலீசாகி மாமியாரை கைது பண்ண தான் படிக்க வந்தீர்களா என கேட்கின்றனர்.

ஆனால் சந்தியா யாருக்கும் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக உட்கார்ந்து விடுகிறார். அதன்பிறகு கோச் வந்து அட்டனன்ஸ் எடுத்துவிட்டு சில கேள்விகளைக் கேட்கிறார். மற்றவர்கள் அனைவரும் ஆர்வமாக பதில் சொல்ல சந்தியா எல்லாத்துக்கும் கிடைத்தது அதை ஒரு நோட்டில் எழுதி வைப்பதோடு அமைதியாகவே இருக்கிறார். பக்கத்தில் இருப்பவர் எல்லாத்துக்கும் உங்களுக்கு விடை தெரியுமா அப்படி இருக்கும்போது ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் என கேட்கிறார். சந்தியா பதில் சொல்லாமல் அமைதியாக சிரிக்கிறார்.

அதன்பிறகு கிளாஸ் முடிந்ததும் சரவணனுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். சரவணன் வந்தது கிளாக் எப்படி போச்சு என கேட்க ரொம்ப நல்லதா போச்சு அட நீங்க வேற எல்லாரும் என்னை பயங்கரமா கலாய்ச்சிட்டாங்க என கூறுகிறார். ஏன் என்னாச்சு என கேட்க சந்தியா நடந்த விஷயங்களைக் கூறுகிறார். மேலும் இதற்கெல்லாம் காரணம் நான் புடவையில் வந்தது தான் எனவும் கூறுகிறார். அப்போ நீங்களும் அந்த மாதிரி டிரஸ் பண்ணி வைங்க என சொல்ல அதனால உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லையா என சந்தியா கேட்கிறார்.

நாகரீகமா எந்த டிரஸ் போட்டாலும் தப்பில்லை என சரவணன் கூறுகிறார். பார்வதி கொடுத்தான் சுடிதார் போன்ற அதனால அது பிடிக்காது என்று சொல்ல முடியுமா என கூறுகிறார். பிறகு சந்தியா நீங்க எனக்கு கணவராக கிடைச்சது நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் என பெருமைப்படுகிறார்.

இந்த பக்கம் வீட்டில் எல்லோரும் சாப்பிட உட்கார அந்த நேரத்தில் எண்ணி செந்தில் சரவணன் சந்தியாவை காணவில்லை என சிவகாமி சொல்ல செந்தில் வந்துவிடுகிறார். சரவணன் கடையில் கூட்டம் அதிகம் என கூறுகிறார். பிறகு சந்தியாவும் சரவணனும் வர கடையில வேல அதிகமா என கேட்டேன் அவ்வளவு அதிகமா கூட்டம் இல்லை என சரவணன் சொல்கிறார். சந்தியா உதவியாக இருக்கலாம் என கேட்க அதெல்லாம் உதவியா இருக்காங்க கணக்கெல்லாம் டக்கு டக்குனு போடறாங்க என கூறுகிறார். கடையில கூட்டமா இருந்துச்சு என செந்தில் கேட்க கூட்டம் இருந்துச்சு அதெல்லாம் முடிச்சுட்டு வந்து விட்டோம் என சொல்லி சமாளித்திருக்கிறார்.

பிறகு சரவணன் சரி எனக்கு பசிக்குது சாப்பாடு இல்லை என பார்வதியிடம் சொல்லி பேச்சை மாற்றி விடுகிறார். இதனால் அர்ச்சனாவுக்கு சந்தேகம் எழுகிறது. ஆதி பார்வதி கல்யாணம் பற்றி பேச தொடங்க நான் உனக்கு இங்க இருக்கறது புடிக்கலையா என கேட்கிறார். சந்தியா நாளைக்கு ரிசல்ட் வருது எவ்வளவு மார்க் எடுக்கிறாருனு பார்த்து முடிவு பண்ணலாம் என கூறுகிறார். உடனே சிவகாமி மார்க் எடுத்தாலும் சரி எடுக்கலனாலும் சரி மாப்பிள்ளை கிட்ட பேசிட்டு கல்யாண வேலையை ஆரம்பிக்கணும் என கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.