போன இடத்தில் சந்தியாவிற்கு புதிய பகை உருவாகிறது.
Raja Rani 2 Episode Update 30.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. அர்ச்சனா செந்தில் தான் செய்த வேலையை முழு கண்டுபிடிக்காமல் இருக்கவும் அவரை மயக்கவும் மாடர்ன் உடை அணிந்து அவரை மயக்கி இருக்கிறார். அர்ச்சனாவை மாடர்ன் உடையில் பார்த்த செந்தில் அவரது அழகில் மயக்கம் போட்டு விழுகிறார். நீங்கதான் ஆடி மாசம் முடிஞ்சு போச்சு என சொல்லிட்டு இருந்தீங்க. அதனாலதான் இப்படியொரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்று பிளான் பண்ணினேன். அதன்பிறகு இருவருக்கும் இடையே ரொமான்ஸ் நடக்கிறது.
மத்திய அரசு பயப்படுகிறது : ராகுல் விமர்சனம்
விடிந்ததும் காலையில் சிவகாமி கணவரை காணவில்லை என தேடிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் சரவணனை அப்பா கையில் மல்லிகைப் பூவுடன் வீட்டிற்கு வருகிறார். சிவகாமியைப் பார்த்து பூளுக்கு வாசனை சேர்க்க உனக்காக வாங்கி வந்தேன் என்று கவிதையாக பேசுகிறார். பிறகு சிவகாமி பூவை வாங்கி கொண்டு மயிலிடம் கொடுத்து நான்கு துண்டுகளாக கட் செய்து எனக்கு ஒரு துண்டை எடுத்துக்கொண்டு மீதி நீ, பார்வதி மற்றும் அர்ச்சனா ஆகியோர் வைத்துக் கொள்ளுங்கள் என கூறுகிறார். பிறகு மைதிலி பூவை எடுத்து வந்தேன் நானே வைத்துவிடுகிறேன் வெளியே சிவகாமி தலையில் வைக்க போக சரவணனின் அப்பா நான் பார்த்துகிறேன் நீ போ மயிலே என அவரை அனுப்பிவிட்டு சிவகாமி தலையில் வைத்து விடுகிறார்.
இருவரும் கோவிலுக்குச் சென்றிருந்த நேரத்தில் பாஸ்கர் வீட்டுக்கு வருகிறார். பார்வதி ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து வந்து கொடுக்கிறார். மயில் காபி எடுத்து வரப் போன நேரத்தில் பாஸ்கர் நாளைக்கு வெளிய போகலாம் நீ கண்டிப்பா வரணும் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
இந்த பக்கம் சந்தியாவும் சரவணனும் பேசிக் கொண்டிருக்க சந்தியா காபி குடிக்கலாமா என கேட்கிறார். ரொம்ப தூரம் போகணும் என சரவணன் சொல்ல போன் பண்ணா ரூமுக்கு எடுத்து வந்து தருவாங்க என சொல்கிறார். அப்போ சொல்லுங்க நான் அதுக்குள்ள ஒரு குளியல் போட்டுவிட்டு வரேன் என குளிக்கச் சென்று விடுகிறார் சரவணன். அதற்கு சந்தியாவிற்கு தோழி ஒருவர் இடமிருந்து போன் வர அவர் நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருக்கிறார். அதன்பிறகு சந்தியா காபி சொன்னாரு மறந்து விட்டோம் என உள்ளே செல்கிறார். எங்க இவரை இன்னும் ஆள காணோம் டவல் வேற வெளியவே இருக்கு என தேடுகிறார்.
Ajith ரசிகர்களுக்கு காத்திருக்கும் Surprise – Dhruv Vikram அடுத்த படம் இவருடனா?
பிறகு சரவணன் பாத்ரூமில் இருந்து வெளியே வந்து ஒரு நிமிஷம் வாங்க என உள்ளே அழைத்துச் சென்று இதுல எப்படி தண்ணி வரும் எது சுடுதண்ணீர் எது பச்சைத் தண்ணீர் என கேட்கிறார். பிறகு சந்தியா விளக்கம் கொடுக்க சரவணன் தெரியாமல் சோயர் திறந்து விட இருவரும் நனைந்து விடுகின்றனர். பிறகு சரவணன் சந்தியாவிடம் சாரி கேட்டு அவருக்கு துடைத்து விடுகிறார். நீங்க மட்டும் குளிக்காம ஏற்கனவே குளித்த என்னை குளிக்க வச்சுட்டீங்க என திட்டி விட்டு வெளியே செல்கிறார் சந்தியா.
அதன் பிறகு அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க அந்த நேரத்தில் சந்தியா சரவணன் சாப்பிட வருகின்றனர். போட்டியாளர்களில் ஒருவர் என்று புதிய உடையில் வந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் அனைவரிடமும் என்னுடைய உடை எப்படியிருக்கு என கேட்க அனைவரும் நன்றாக இருக்கு என கூறி அவரை சந்தோஷப்படுத்துகின்றனர். சந்தியாவும் சரவணனும் வந்த பிறகு அவர்களிடமும் அந்தப் பெண் உடை பற்றி கேட்க சரவணன் நன்றாக இருக்கிறது என கூறி விடுகிறார். பிறகு சந்தியாவிடம் கேட்க உண்மையை சொல்லட்டுமா இல்ல உங்கள சந்தோஷப்படுத்த பொய் சொல்லட்டுமா என கேட்கிறார். உண்மையை சொல்லுங்க என கூற சந்தியா உங்களோட ஸ்கின் டோனுக்கு இந்த கலர் செட் ஆகல என சொல்கிறார். அந்தப் பெண்ணின் முகம் சுருங்கி விடுகிறது. பிறகு சந்தியா அங்கிருக்கும் ஒரு பொருளை எடுக்க போக தெரியாமல் உணவுப்பொருள் அந்தப் பெண்ணின் உடை மீது கொட்டி விடுகிறது.
சந்தியா மன்னிப்பு கேட்டது இல்லாமல் டிஷ்யூ பேப்பர் வைத்து துடைக்க விடுவதாக கூறுகிறார். ஆனால் அந்தப் பெண் எல்லோரும் நல்லா இருக்குன்னு சொல்ல நீங்க மட்டும் நல்லா இல்லைன்னு சொன்னதுமே எனக்கு தெரியும். திட்டம் போட்டு இப்படி பண்ணீங்க என பேசி விட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். சந்தியா நான் தெரியாமல்தான் செய்தேன் என கூற அங்கிருந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறுகின்றனர். சரவணன் விடுங்க உங்க மேல தப்பு இல்ல அவங்க தான் தப்பா புரிஞ்சுகிட்டாங்க என கூறுகிறார். இத்துடன் ராஜா ராணி 2 இன்றைய எபிசோட் முடிவடைகிறது.