Raja Rani 2 Episode Update 26.10.21

திட்டி தீர்த்த சிவகாமியை சத்தம் போட்டு அடக்கி உள்ளார் சந்தியா.

Raja Rani 2 Episode Update 26.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. குடும்பத்தார் அனைவரும் பக்கத்து வீட்டு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்றிருந்த போது சந்தியாவும் சரவணனும் ரூமில் பேசிக்கொண்டதை அந்த வீட்டார் கொச்சையாக பேசியதால் சிவகாமி கோபத்தோடு அங்கிருந்து வீட்டிற்கு வந்தார். சந்தியாவும் சரவணன் நடந்தது என்ன என்பதை சொல்வதைக் கூட கேட்காமல் திட்டி தீர்த்தார். வேறு வழியில்லாமல் சந்தியா ஐயோ அத்தை மொதல்ல நான் சொல்றத கொஞ்சம் கேட்கறீங்களா என சத்தம் போட்டு அவரை அமைதிப்படுத்தினார். உடனே அர்ச்சனா ஓய் என்ன எங்க அத்தை கிட்டயே போய் சத்தம் போடுற என சிவகாமியை மூட்டி விட்டார். உடனே பார்வதி அவங்க சத்தம் போட்டு பேசல அவங்க விஷயத்தை சொல்ல அனுமதி தானே கேட்கிறாங்க என கூறினார்.

தமிழகத்தில் மிக உயரமான ஆஞ்சநேயர் சிலை, ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை

சிவகாமி சரி சொல்லு அப்படி என்னதான் சொல்றானு பார்க்கலாம் என சந்தியாவை பேச வைக்கிறார். சென்னையில் நடக்கிற ஒரு சமையல் நிகழ்ச்சியில் இவர் கலந்துக்க வைக்கிறது பத்தி பேசிட்டு இருந்தேன் என கூறுகிறார். அதில் மட்டும் இவர் கலந்துகிட்டா இவருடைய பெயர் உலகம் முழுவதும் பரவும். அதன் பிறகு நம்முடைய பிசினஸூம் அதிகமாகும் என கூறுகிறார்.

புறநானூறு என்னன்னு நிறைய பேருக்கு தெரியல! – Karu Pazhaniappan Funny Speech | Puram Short Film Launch

உடனே அர்ச்சனா, ஆதி, செந்தில் என அனைவரும் அதெல்லாம் சரவணன் ஜெயிக்க முடியாது. அவனுக்கு பூந்தி தான் போட தெரியும். அவங்க விதவிதமா சமைப்பாங்க எதுக்கு இந்த தேவையில்லாத வேலை என நக்கலாக பேசுகின்றனர். அனைவரையும் அடக்கிய சரவணனின் அப்பா நீ கலந்து கொள் என சொல்கிறார். ஆனால் அதெல்லாம் வேண்டாம் என சரவணன் கூறிவிடுகிறார். இதனால் சந்தியா அதிர்ச்சி அடைகிறார். பின்னர் அவரை மீண்டும் சம்மதிக்க வைக்க முயற்சி செய்ய சிவகாமி அதான் வேணான்னு சொல்றான்ல விடு என கூறுகிறார்.

பின்னர் அவர் கடைக்கு கிளம்ப ரூமுக்கு போன அர்ச்சனா இவங்க பண்றதெல்லாம் பாத்தா கடுப்பா இருக்கு என செந்திலிடம் கூறுகிறார். செந்தில் அர்ச்சனாவிடம் மகிழ்ச்சியாக இருக்க அவரை நெருங்கி செல்ல தள்ளி விடுகிறார். சந்தியா பின்பக்கத்தில் வருத்தத்தோடு அமர்ந்து கொண்டு இருக்க அப்போது சரவணன் வந்து மன்னிப்பு கேட்கிறார். பிறகு சந்தியா மீண்டும் சரவணனுக்கு ஊக்கமளித்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதிக்க வைக்கிறார். நீங்க கலந்து ஜெயித்து விட்டா அத்தை மாமாவுக்கு எவ்வளவு பெருமையா இருக்கும் என நினைச்சு பாருங்க என சொன்னதும் சரவணன் நினைத்துப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். பிறகு இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்கிறேன் ஜெயிக்கிறேன் என சபதம் எடுக்கிறார்.

அதன்பிறகு ரூமில் சரவணன் கண்ணாடி முன்பு நின்று குட் மார்னிங் என்ன சொல்லி பயிற்சி எடுக்கிறார். அப்போது சந்தியா வந்து நின்று இதனை ரசித்துக் கொண்டிருக்கிறார். பிறகு சரவணனுக்கு குட் மார்னிங் எப்படி சொல்ல வேண்டும் என சொல்லிக் கொடுக்கிறார். இந்த நேரத்தில் சிவகாமி சரவணனை அழைக்க அப்போது சந்தியா அத்தையிடம் நான் இந்த சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என சொல்லிடுங்க. எவ்வளவு சீக்கிரம் சொல்கிறோமோ அவ்வளவு நல்லது என சொல்லி அனுப்புகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்.