பர்த்டே ஃபங்ஷனுக்கு போய் தனியாக பேசி சிக்கியுள்ளனர் சந்தியா சரவணன்.
Raja Rani 2 Episode Update 25.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. கடையில் மிளகாயை கட் பண்ணிக் கொண்டிருக்கும் போது கண்ணில் வைத்துக் கொண்டதால் கண் எரிச்சலில் தவித்த சரவணனுக்கு சந்தியா உதவி செய்ய அதனை சுற்றி இருந்தவர்கள் பார்த்து சிரிப்பாய் சிரித்தனர். இதே நேரத்தில் சிவகாமி வந்து சந்தியாவை வழக்கம்போல் திட்டித் தீர்த்து அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
இந்த பக்கம் அர்ச்சனாவும் செந்திலும் கடையில் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது ஒருவர் குழந்தை ஒன்றைத் தூக்கிக் கொண்டு வர அதனைப் பார்த்த செந்தில் அர்ச்சனாவிடம் அந்த குழந்தை க்யூட்டாக இருக்கிறது என கூறினார். நாமளும் குழந்தை பெத்துக்கலாம் என சொல்ல அர்ச்சனா அதெல்லாம் இப்போதைக்கு முடியவே முடியாது. எனக்கு அந்த ஐடியாவே இப்போ இல்லை என முகத்தில் அடித்தாற் போல கூறினார்.
போட்டியில் இருந்து விலகுகிறேன் : ‘டென்னிஸ் சூறாவளி’ ஆஷ்லி பார்ட்டி அறிவிப்பு
பின்னர் வீட்டில் அனைவரும் பக்கத்து வீட்டு குழந்தையின் பிறந்தநாள் விழாவுக்காக கிளம்பிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் சரவணன் கடையிலிருந்து வந்து விட அவரையும் விழாவிற்கு அழைக்கிறார் சிவகாமி. ரூமில் இருக்கும் சந்தியாவிற்கு திடீரென சஞ்சனாவிடம் இருந்து போன் கால் வருகிறது. அப்போது அவர் நான் சொன்ன சென்னையில் நடக்கிற சமையல் நிகழ்ச்சிக்கு இன்னைக்கு மாலை 5 மணிக்குள் விண்ணப்பிப்பதற்கான நேரம் முடிந்துவிடுகிறது எனக் கூறுகிறார். எப்படியாவது சரவணனிடம் சொல்லி அதன் பிறகு அத்தையிடம் சொல்லி அவரை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைக்க வேண்டும் என சந்தியா திட்டமிடுகிறார்.
அதற்குள் அனைவரும் நிகழ்ச்சிக்கு கிளம்பிவிட சந்தியாவால் சரவணனிடம் இந்த விஷயத்தை கூற முடியவில்லை. நிகழ்ச்சிக்குப் போன இடத்திலாவது எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என முயற்சி செய்கிறார் சந்தியா. அப்போது சிவகாமி எல்லோருக்கும் ஜூஸ் கொடு, உதவி பண்ணு என கூறி அனுப்பி வைக்கிறார். ஜூஸ் கொடுக்கும் சந்தர்ப்பத்தில் சந்தியா சரவணனிடம் கொஞ்சம் பின்னாடி வாங்க உங்களிடம் பேச வேண்டும் என கூறிவிட்டு மேலே செல்கிறார். சரவணன் பின்னாடியே செல்கிறார். இருவரும் மேலே ஒரு ரூமில் பேசிக்கொண்டிருக்கும் போது வீட்டின் சொந்தக்காரர் வந்ததால் மறைந்து கொள்கின்றனர். அவர் உள்ளே வந்து கிப்ட்டுகளை வைத்துவிட்டு கதவை சாத்தி விடுகிறார்.
Sivakarthikeyan-னின் Doctor படம் லாபம்..ஆனால்? – Nelson-னை திட்டிய Producer K.Rajan
பின்னர் சந்தியா சரவணனிடம் பேசி அவரை சம்மதிக்க வைக்கிறார். இந்த நேரத்தில் வீட்டின் சொந்தக்காரர் உட்பட சரவணன் குடும்பத்தினர் அனைவரும் வந்து கதவை திறந்து விடுகின்றனர். சந்தியா சரவணன் ரூமில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். வீட்டுக்காரர் எல்லாம் சிவகாமியை சொல்லணும் வீட்ல சின்னஞ்சிறுகளை தனியாய் இருக்கவே விடுவதில்லை அதுதான் ரூம் கிடைச்சதும் இங்கே நுழைந்துட்டாங்க என சொல்கிறார். அதுமட்டுமல்லாமல் சரவணனிடம் சரவணா கேக்-லாம் கட் பண்ணி முடிச்சாச்சு, கேக் சாப்பிடுறியா என கிண்டலாக கேட்கிறார். சிவகாமி கோபப்பட்டு அந்த இடத்தை விட்டு வெளியேற சந்தியாவும் சரவணன் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கின்றனர்.
இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்.