ஜோதியால் சந்தியாவுக்கு எதிர்ப்பாராத அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்தியா சென்னையில் உள்ள ஒரு மாலில் வெடிகுண்டை தேட கடைசியில் அது ஒரு குப்பைத் தொட்டிக்குள் இருப்பதை கண்டுபிடிக்கின்றனர். பிறகு அந்த பாமையும் வெடிக்காமல் செயல் இழக்க செய்கின்றனர்.

அடுத்து சரவணன் இந்த விஷயத்தை ஜோதியிடம் சொல்லி அவளை வெறுப்பேற்றுகிறார். கோழை என சொல்ல ஜோதி எல்லாரும் சேர்ந்து என்னையே முட்டாளாக்கிட்டீங்க இல்ல உங்கள சும்மா விடமாட்டேன் என சொல்லிக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் சிவகாமி வீட்டில் எல்லோரும் சந்தியாவின் சாதனையை பற்றி பேச சிவகாமி சரவணனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல என வருத்தப்படுகிறார். சந்தியா மீது கோபப்படுகிறார்.

அடுத்து மறுபக்கம் தீவிரவாதிகள் மூன்று பானம் செயலிழக்கப்பட்ட விஷயத்தை சொல்ல அதற்கெல்லாம் காரணம் சந்தியா தான் என தெரிந்து கொள்ளும் செல்வம் கோபப்படுகிறான். கௌரி மேடம் சிரித்து இன்னும் வெறுப்பேற்ற செல்வம் உங்கள சும்மா விடமாட்டேன் என சொல்கிறான்.

அடுத்து திடீரென வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டு போலீசில் வரும் சம்பவ இடத்திற்கு ஓட அதற்குள் தீவிரவாதிகள் ஜோதி இருக்கும் இடத்தை சுற்றி வளைத்து ஜோதியை செல்வத்தையும் அங்கிருந்து கடத்தி விடுகின்றனர். பிறகு சந்தியா இந்த இடத்திற்கு வந்து பார்க்க ஜோதி இல்லாமல் இருக்க செல்வத்தின் ஆட்கள் ஜோதியை கடத்திவிட்டதாக சொல்கின்றனர். கூடவே சரவணனையும் கடத்திவிட்டதாக சொல்ல சந்தியா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.