சந்தியா கர்ப்பமானதால் அவரது ஐபிஎஸ் கனவுக்கு புது சிக்கல் உருவாக்கியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சந்தியா மயங்கி விழுந்த நிலையில் அவரை உடன் இருந்தவர்கள் எழுப்பி உட்கார வைத்து தண்ணீர் கொடுத்து தேற்றுகின்றனர்.

பிறகு உங்களிடம் ஃபீலிங்ஸ் அதிகம் உள்ளது அதனால் தான் இப்படி ஆகிறீர்கள் வீட்டில் இருப்பவர்களிடம் பேசுங்கள் என சொல்ல சந்தியா சரவணனுக்கு ஃபோன் போட்டு ஒரு மயக்கமா வருது, வாந்தி வருது, இந்த பிராக்டிஸ் எல்லாம் எப்படி செய்யப் போறேன்னு தெரியல என சொல்ல சரவணன் ஒன்றும் புரியாமல் இருக்க அதன் பிறகு சிவகாமி அங்கிருந்த பெண் ஒருவரிடம் மயக்கம் வருது வாந்தி வருதுன்னு சொல்றேன் அப்படின்னா வயிற்றில் குழந்தை உருவாகி இருக்கபோது என சொல்ல சரவணன் ஒருவேளை சந்தியா கர்ப்பமாக இருப்பாரோ என அதிர்ச்சி அடைகிறார்.

மறுநாள் காலையில் சந்தியா போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு கிளாசுக்கு கிளம்ப சரவணன் இந்த விஷயத்தை சொல்ல தொடர்ந்து போன் பண்ண சந்தியா போனை எடுக்கவில்லை. மல்டி டாஸ்க் பிராக்டிஸில் சந்தியா முடி ஈடுபாடு பங்கேற்க முடியாமல் தவறி கீழே விழுகிறார். கௌரி மேடம் உன்ன மாதிரி ஒரு கேண்டிடேட் நான் பார்த்ததே இல்லை என திட்டுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி சீரியல் எபிசோட் முடிவடைய அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் அக்பர் நீயாக எனது டீமில் இருந்து விலகி விடு என சொல்ல சந்தியா அதிர்ச்சி அடைகிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.