ராஜா ராணி 2 இன்றைய சீரியல் எபிசோடு பார்த்த ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சந்தியாகவும் சரவணனும் சென்னை சென்ற நிலையில் பஸ் ரிப்பேர் ஆகி பாதியில் நிற்க காலையில் விடிவதற்குள் எப்படி சென்னைக்கு செல்வது என சரவணன் சந்தியா குழம்புகின்றனர்.

அந்த வழியாக செல்லும் கார்களில் உதவி கேட்டும் யாரும் உதவி செய்யவில்லை. இப்படியான நிலையில் அந்த வழியாக பைக்கில் வந்தவர்களிடம் உதவி கேட்க அவர்கள் சந்தியா இன்டர்வியூக்கு செல்வது அறிந்து பைக்கை கொடுத்து அனுப்பி வைக்கின்றனர் வரும்போது பைக்கை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என கூறுகின்றனர்.

பிறகு இருவரும் பைக்கில் சென்று ஒரு இடத்தில் களைப்பாற அங்கு வேறொரு தம்பதி வந்து நிற்க அவர்களிடம் இருந்து ஹேண்ட்பேக்கை திருடர்கள் புடுங்கிச் செல்ல சந்தியா சரவணன் என இருவரும் பைக்கில் சென்று அவர்களை விரட்டி பிடித்து அடித்து உதைத்து பேக்கை வாங்கி வருகின்றனர்.

இந்த பக்கம் சிவகாமி மன வருத்தமாக அமர்ந்து கொண்டிருக்க அப்போது வந்த அக்கம் பக்கத்தினர் சந்தியா வேற ஊருக்கு வேலை செய்யப் போனா நீ ஒத்துக்குவியா என கேட்க சிவகாமி அதுக்கெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன். சந்தியா இந்த ஊரை விட்டு வேற எங்கேயும் போக மாட்ட என கூறுகிறார். அதுக்கு என்ன பண்ணனுமோ அதை நான் பண்ணுவேன் என சிவகாசி கூறுகிறார். ரவி இது குறித்து பேச ஆரம்பிக்க சிவகாமி என்னுடைய நிபந்தனைக்கு உட்பட்டு தான் எல்லாம் நடக்கணும் என உறுதியாக குறிப்பிடுகிறார். அதுக்கு எந்த காலத்திலும் நான் ஒத்துக்க மாட்டேன் என சொல்கிறார்.

அடுத்ததாக இந்த பக்கம் சந்தியா இன்டர்வியூவிற்காக காத்துக் கொண்டிருக்க இந்த தருணத்தை எண்ணி சந்தோஷப்படுகிறார். பிறகு சந்தியா உள்ளே போக அவரை போலீஸ் இன்டர்வியூ செய்கிறது நீங்க தான் பத்து நிமிடம் லேட்டாக வந்தீங்களா என கேட்க, ஆமாம் என சொல்லி நடந்த விஷயங்களை கூறுகிறார்.

தன்னுடைய கணவர் ஸ்வீட் ஸ்டால் வைத்திருப்பதாக சந்தியா சொல்ல அங்கிருந்த போலீஸ் ஒருவர் அதைப்பற்றி நக்கலாக சொல்ல சந்தியா அதற்கு பதிலடி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது. சந்தியாவும் சரவணனும் திருடனை பிடித்து ஹேண்ட்பேக்கை புடுங்கும் காட்சிகளில் பைக்கை ஓட்டியது சரவணன் தானா என்று கேள்வி எழுகிறது? காரணம் பின்புறத்தில் இருந்து பார்க்க சரவணன் போன்றே தெரியவில்லை. சில நொடிகள் மட்டுமே சரவணன் பைக் ஓட்டுவது போல காட்டப்பட்டது. இந்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் ட்ரோலுக்குள்ளாகி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.