சந்தியா விபத்தில் சிக்கிய நிலையில் அவரைத் தேடி அலைகிறார் சரவணன்.
Raja Rani 2 Episode Update 16.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சந்தியா சென்ற பேருந்து பஞ்சர் ஆகிய நிலையில் அனைவரும் கீழே இறக்கப்பட்டு பஞ்சர் போடும் வேலை நடக்கிறது. சந்தியா பேருந்தில் முன்புறமும் சரவணன் பேருந்தில் பின்புறமும் நின்று கொண்டிருக்கின்றனர். சரவணன் பார்க்க யாரோ ஒருவர் அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் பஞ்சர் போடப்பட்டு அனைவரையும் பஸ்ஸில் ஏறுமாறு கண்டக்டர் கூற சந்தியா உட்பட அனைவரும் பஸ்ஸில் ஏறுகின்றனர். சந்தியா உட்கார்ந்திருந்த சீட்டில் வேறு ஒரு பெண்மணி உட்கார்ந்து கொண்டு சீட்டை தர மறுக்கிறார். இதனையடுத்து சந்தியா வேற சீட்டில் உட்கார்ந்து கொள்வதாக கூறி செல்கிறார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக லாரி ஒன்று பேருந்தின் பின்புறத்தில் மோதி பெரும் விபத்துக்குள்ளாகிறது.
ஆயுத பூஜையில் Suriya ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம Treat – கொண்டாட தயாராகுங்கள்.! | Tamil News HD
பேருந்தில் இருப்பவர்கள் பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். வெளியே இருந்த சரவணன் சந்தியாவை தேடி பேருந்துக்குள் அலைகிறார். ஆனால் அவரை மீண்டும் காணவில்லை. சந்தியா சந்தியா என கத்திக் கொண்டு அவரை தேடுகிறார். ஆனாலும் சந்தியா எங்கே இருக்கிறார் என்பதை சரவணனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இன்னொருபுறம் சிவகாமி வீட்டிற்கு வந்திருந்த பாஸ்கரின் அம்மா பார்வதி கல்யாணத்தை தள்ளி வைத்ததற்கு காரணம் சந்தியா தான் என கூறுகிறார். ஆனால் சந்தியா எங்க வீட்டுக்கு வந்து எதையும் சொல்லல. சந்தியா உங்ககிட்ட சொன்னதைக் கேட்டு தான் நான் இந்த முடிவை எடுத்தேன். நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு இருந்தா என்ன செய்றதுன்னு தான் நான் இதை சொல்ல வந்தேன் என கூறினார்.
அதன் பின்னர் சரவணன் வீட்டு தெருவில் இருக்கும் யாரோ ஒரு பெண்மணி ஓடிவந்து சந்தியா சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி விட்டதாக கூறுகிறார். இதனால் அதிர்ச்சி அடைகிறது குடும்பம். இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்.